வியாழன், 13 நவம்பர், 2014

பயணங்கள் பலவிதம் - 2


பயணத்தோட ஆரம்பத்தையும் தெரிஞ்சிக்க இங்கே ஒரு தட்டு தட்டுங்க ....


புடாபெஸ்ட் என்பது புடா மற்றும் பெஸ்ட் என்னும் இரு நகரங்கள் சேர்ந்ததாகும். இந்த இரு நகரங்களுக்கு இடையே தானுபே (Danube) என்னும் நதி ஓடுகிறது.

Chain Bridge, புடாபெஸ்ட்ல் பார்க்க வேண்டிய முக்கியமான இடம், இந்த பாலம் 1820 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இதற்க்கு முன்பு வரை மரக்கட்டைகளால் ஆன பாலம் இருந்தது, இதை ஒவ்வொரு குளிர் காலத்திலும் அப்புறபடுத்தி விடுவார்கள். (குளிரியில் மரக்கட்டைகள் உடைந்துவிடும் என்பதால்), இதை Pontoon Bridge என்பார்கள்

(ரெம்ப அறிவாளின்னு நினைக்கதீங்க, கூகிளாண்டவர்  சொல்லித்தான் எனக்கு தெரியும், நினைக்க மாட்டீங்கள்ள ??? ).



                                         பட உதவி : நம்ம கூகிளாண்டவர் தான்

Count István Széchenyi என்று, ஒரு ஹங்கேரியன் புரட்சியாளர் இருந்தார், அவர் தந்தை ஆற்றின் மறுகரையில் இறந்து போனார். குளிர் காலம் என்பதால் இவரால் ஆற்றை கடக்க  முடியவில்லை. அப்பொழுது தான் ஒரு நிரந்தர பாலத்தை உருவாக்க முடிவு செய்தார். 

பாலத்தின் இருகரையிலும், இரண்டு சிங்க சிலைகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த சிங்கங்களுக்கு பின்னால் ஒரு கதை உள்ளது.

இதை Marschalko Janos என்பவர் வடிவமைத்தார். அவர் சிங்கங்களுக்கு நாக்கை செதுக்க மறந்து விட்டார், இதை பாலத்தின் திறப்பு விழாவின் சமயத்தில் ஒரு சிறுவன் கவனித்து சொன்னான். மனம் வெறுத்து போய் தானுபே ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.


இது தான் அந்த சிங்கம் 



புடாபெஸ்ட்ல் எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக.


Chain Bridge 




                                                       புடாபெஸ்ட் கோட்டை 





சர்ச்சும், பாராளுமன்றமும் ஒரே உயரம் வருமாறு கட்டி இருக்கிறார்கள்.

கடவுளும், அரசாங்கமும் ஒன்று என்ற நம்பிக்கையை காட்டவாம்.

என்னோட வலது பின்பக்கம் இருக்கிறது பாராளுமன்றம், இடது பின்பக்கம் சர்ச்.



                                                     பாராளுமன்றம்



Limousine Car, ஒரே இடத்துல 2 கார் நிக்கிறத பார்த்து ரெம்ப பீலிங்க்ஸ் போங்க   


இரவு 11 மணிக்கு ஹோட்டலுக்கு வந்து அதிகாலை 5 மணிக்கு (அடுத்த நாளும் தூக்கம் போச்சு) எழுந்திருச்சி கிளம்பி காலை 7:10 மணிக்கு வியன்னா செல்லும் ரயிலில் கிளம்பினோம். 10:10 வியன்னாவில் இறங்கினோம்.


இறங்கின பத்தாவது நிமிஷம் ஒரு அதிர்ச்சியான விசயத்த கேள்வி பட்டோம்.

அது என்னவா இருக்கும் ?????????????


அடுத்த பதிவுல பாருங்க......... 

                                                                                             
                                                                                              நன்றிகளுடன் 
                                                 
                                                                                    மகேஷ் பிரபு விஜயராஜ்              
 

புதன், 12 நவம்பர், 2014

பயணங்கள் பலவிதம் - 1

 நவம்பர் மாதம் 8, 9 தேதிகளில் இத்தாலியிலிருந்து புடாபெஸ்ட் மற்றும் வியன்னா ஒரு பயணம் மேற்கொண்டோம் (மொத்தம் 4 அப்பாவிகள்), அதை பற்றிய ஒரு பயண பதிவு இது.

'ஆவ்' ன்னு கொட்டாவி விட்டுகிட்டே படிக்க ஆரம்பிங்க பாப்போம்......

சனிக்கிழமை காலை 8:45 மணிக்கு ரோம் சியாம்பினோ (Ciampino) விமான நிலையத்திலிருந்து ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் சென்று (2 மணி நேரம் பயணம், டிக்கட் விலை 56 Euro), அன்று முழுவதும் அங்கு சுற்றி பார்த்து விட்டு, மறுநாள் காலை 7:10 க்கு ரயில் (3 மணி நேரம் பயணம், டிக்கட் விலை 13 Euro), மூலம் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவை வேடிக்கை பார்த்துவிட்டு இரவு 7:30 மணிக்கு ரோமிற்கு ரயில் மூலம் அடுத்த நாள் காலை 9:22 மணிக்கு திரும்பி வருவதாக திட்டம் (14 மணி நேரம் பயணம், டிக்கட் விலை 39 Euro).    

ஏன் டிக்கட் விலையெல்லாம் சொல்றன்னு கேக்குறீங்கள, அதுக்கு பதில் பின்னாடி இருக்குங்க (சஸ்பென்ஸ் வச்சுடம்ல)......

நவம்பர் மாதம் 8ந் தேதி :

காலையில் 4 மணிக்கே அலரம் வச்சு கஷ்டப்பட்டு எந்திரிச்சி, கிளம்பி 7 மணிக்கு சியாம்பினோ (Ciampino) விமான நிலையம் போனோம். செக்கிங்  எல்லாம் முடிச்சிட்டு வரிசைல நின்னோம்......நின்னுகிட்டே இருந்தோம். போர்டிங் கேட் தொறக்கிற வழிய காணோம்.

அந்த விமான நிலையத்தில இருந்த கூட்டத்த, அங்க இருந்த மக்களையும் பார்த்த நம்ம கோயம்பேடு பஸ் ஸ்டாண்டே பரவாயில்லைன்னு தோணும்.

நீங்களே பாருங்க......








 எங்களுக்கு முன்னாடி ஏகப்பட்ட பேர் நின்னுகிட்டு இருந்தாங்க  (நாம ரேஷன் கடைல நிக்கிறதா விட, ரெம்ப பொறுப்பா நின்னாங்க). வரிசைல வரிசைல நின்னு கால் வலிக்க ஆரம்பிச்சிருச்சி, போங்கடா நீங்களும் உங்க வரிசையும் அப்படின்னு சொல்லிட்டு உக்கார இடம் தேடி அலைஞ்சோம். எங்கேயும் இடம் கிடைக்கல, பந்தில உக்கார மாதிரி தரைல நல்ல ஜம்ன்னு உக்காந்துட்டோம்.  

ஒருவழியா 9 மணிக்கு ஒரு அறிவிப்பு, புடாபெஸ்ட் போற விமானம் இன்னொரு விமான நிலையமான ஃபியுமிசினோ (Fumicino) ல இருந்து கிளம்பும், எல்லாம் போர்டிங் கேட் போங்கனாங்க.

 அங்க போனா ஒரு பஸ்ல ஏத்திவிட்டாங்க, அந்த பஸ் ஒரு U-டர்ன், அரைவல் கேட்ல இறக்கிவிட்டுச்சி. எல்லாரும் விமான நிலையத்த விட்டு வெளியே போங்க. இன்னொரு பஸ் மூலமா ஃபியுமிசினோ போலாம்ன்னு சொன்னாங்க. அடிச்சி பிடிச்சி அந்த பஸ்ல ஏறிட்டோம், அது என்ன மாயமோ என்னமோ, எனக்கு உக்கார எடம் இல்லை. டிரைவர், வா பங்காளி என் பக்கத்துல கிளினர் சீட்ல உக்காருன்னு சொன்னாரு.

ஃபியுமிசினோ விமான நிலையத்தில செக்கிங் முடிச்சிட்டு உள்ளே போய் உக்கார்ந்தோம். அப்போ டிங்னு ஒரு சத்தம், என்னான்னு பார்த்தா, என்னோட மொபைலுக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது.

இந்த மாதிரி, இந்த மாதிரி, உங்க விமானம் தாமதமாகி போச்சு, மன்னிச்சிருங்க சாமி, விமானம் தோராயமா 12:30 கிளம்பும்ன்னு வந்திருந்தது.
அப்போ புடாபெஸ்ட் பீ.....பீ...... தானா, ஏர்போர்ட் தான் சுத்தி சுத்தி பாக்கணும் போல நினைச்சிகிட்டு போர்டிங் கேட் முன்னாடி வெறிக்க வெறிக்க பார்த்துட்டு உக்காந்து இருந்தோம்.

நம்ம ஊர்ல விமானம் தாமதமானால், காஞ்சிபோன சமோசா, சான்விட்ச், காபி, சூஸ் எல்லாம் குடுப்பாங்களே, இவங்க அதே மாதிரி குடுப்பாங்களா, போய் ஏர்லைன்ஸ் ஆளுங்கள்ட்ட கேட்டோம். அவங்க நம்மள விட விவரம், இந்தா பஸ் வந்துகிட்டே இருக்கு, நீங்க இப்போ விமானம் எறிரலாம்னு சொன்னாங்க.    

எங்களுக்கு 2 பஸ்ல மக்கள் ஏறி விமானத்துக்கு போய்டாங்க, நாங்கதான் கடைசி. அங்க போய் பார்த்த எல்லாம் விமான சுத்தி நின்னுகிட்டு இருக்கானுக. ஒரு கோஷ்டி விமானத்தோட விங்க்ஸ்க்கு கிழே குடும்பம் நடத்திகிட்டு இருக்குது.




என்ன விசயம்னா, 4 மணி நேரத்துக்கு மேல தாமதமான, பயணிகளுக்கு காச திருப்பிக்கொடுக்கனுமாம், அதனால எல்லாரையும் 3.45 மணி நேர தாமதத்திலே, விமானம் பக்கத்தில நிக்க வச்சிட்டாங்க.

அப்புறம் ஒரு வழியா உள்ள போய் ஒரு மணிக்கு கிளம்பி மத்தியானம், 3.15 கொண்டு போய் புடாபெஸ்ட் விமான நிலையத்தில இறக்கி விட்டாங்க. சத்தியமா சொல்றேங்க நம்ம மதுரை ஏர்போர்ட் சொர்க்கம், விமானத்தில இருந்து இறங்கி டெர்மினலுக்கு போற பாதைய நீங்களே பாருங்க.
      

அப்புறம் டெர்மினல் போய் சிட்டிக்குள்ளே போக 24 மணி நேரம் பாஸ் வாங்கினோம். ஒருத்தருக்கு பாஸ் இந்திய மதிப்பில் 420 ரூபாய், 5 பேர் கொண்ட குழுவுக்கு 1300 ரூபாய். கணக்குல நம்மள விட ரெம்ப விவரமா இருப்பாங்க போல, எங்க நாலு பேருக்கு 5 பேர் குழு பாஸ் வாங்கிட்டு, பஸ், அப்புறம் மெட்ரோன்னு மாறி சிட்டிக்குள்ள போனோம்.

நாங்க ஹோட்டல் போனப்ப மணி 5. 

அப்படியே ஊர சுத்தி பார்த்தோம், சும்மா சொல்லகூடாது, இரவு விளக்கு வெளிச்சதில ஊர் ரெம்பவே அழகா இருந்தது........


அந்த புகைப்பட தொகுப்ப அடுத்த பதிவுல பாருங்க......... 

                                                                                             
                                                                                                    நன்றிகளுடன் 
                                                 
                                                                                  மகேஷ் பிரபு விஜயராஜ்              

                                                                                                         

சனி, 8 நவம்பர், 2014

தலையின் மேல் விதி - 4

முன்னாடி என்ன நடந்திருக்கும், இத அழுத்தின தெரியும்


கந்தஹார் விமான நிலையம்

 

கந்தஹார் தாலிபான்கள் இந்த விவகாரத்தை தாங்கள் கையாண்டால், உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என கருதி, IC-814 விமானத்தை சுற்றி பாதுகாவலர்களை நிறுத்தி வைத்திருந்தார்கள். நாங்கள் மத்தியஸ்தம் செய்கிறோம், கடத்தல்காரர்கள் பயணிகளை தாக்க கூடாது என்பதற்காவே  பாதுகாவலர்களை நிறுத்தி வைத்திருக்கிறோம் என்றார்கள்.


 இந்தியா அவர்களை நம்பவில்லை, இந்திய கமண்டோக்கள் விமானத்தை நெருங்க கூடாது என்பதற்காவே பாதுகாவலர்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என நினைத்தனர், அதனால் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை பேச்சுவார்த்தை நடத்துமாறு பணித்தனர். 

 

அன்று மதியம் பயணிகளின் உறவினர்கள், பிரதமர் வீட்டின் முன்பு கூடினார்கள். என்ன விலைகொடுத்தேனும் பயணிகளை மீட்க்கவேண்டும் என கோஷமிட்டார்கள். டிசம்பர் 30 வரை பிரதமர் வீட்டின் முன்பு இந்த காட்சி அரங்கேறியது.

 

கடத்தல்காரர்கள், இந்தியாவின் வெவ்வேறு சிறையில் உள்ள 36 தீவிரவாதிகளை விடுவிக்கவிடில், விமானத்தை வெடிக்க செய்து விடுவதாக மிரட்டினார்கள்.

 

வெளியுறவு துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், கடத்தப்பட்ட பயணிகளின் உறவினர்களிடம் அரசு பயணிகளை மீட்க்க எடுக்கும் முயற்சிகளை பற்றி விளக்கிக்கொண்டிருந்தார். உறவினர்கள் எதையும் கேட்கும் நிலையில் இல்லை.

 

"எங்களுக்கு எங்கள் உறவினர்கள் வேண்டும், நீங்கள் என்ன கொடுப்பீர்கள்  என்பதை பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. நீங்கள் காஷ்மீர் கொடுக்கும் நிலைக்கு வந்தால் கூட நாங்கள் கவலை பட மாட்டோம், எங்களுக்கு எங்கள் உறவினர்கள் வேண்டும்" என்றார்கள்.    

 

ஜஸ்வந்த் சிங், "நாட்டின் பாதுகாப்பையும் சிந்திக்க வேண்டும், அரசாங்கத்தால் என்ன முடியுமோ அதை கண்டிப்பாக செய்யும்" என்றார்.

 

பயணிகளின் உறவினர்கள் கோபமடைந்து கோஷமிட்டார்கள்.

 

அதன் பிறகு ஒரு நாள் மாலை, ஜஸ்வந்த் சிங் பத்திரிக்கையாளர்களுடன் சந்திப்பு நடத்தினார், அங்கும் வந்து பயணிகளின் உறவினர்கள் கூச்சலிட்டார்கள், அதில் ஒருவர், இதற்க்கு முன்பு இந்திய அரசாங்கம், உள்துறை அமைச்சர் முப்தி முஹம்மது சயீத் மகள் கடத்தப்பட்ட போது தீவிரவாதிகளை விடுவித்தது போல, இப்பொழுது விடுவியுங்கள், நீங்கள் எதை கொடுத்தாலும் கவலை  இல்லை.காஷ்மீரை கூட கொடுங்கள், எங்களுக்கு எங்கள் உறவினர்கள் வேண்டும்" என்றார்.        

 

இன்னொரு நாள் மாலை, கார்கில் போரில் இறந்த விமானி அஜய் அகுஜாவின் மனைவி, பிரதமர் அலுவலகம் வந்தார். அவர் பயணிகளின் உறவினர்களை சந்தித்தார்.

 

"கடத்தல்காரர்களின் மிரட்டலுக்கு நாம் அடிபணிய கூடாது, இது தொடர் கதையாகிவிடும். நம் நாட்டிற்க்கு அவமானம், அந்த தீவிரவாதிகள் வெளியே வந்தால் நாட்டிற்கு ஆபத்து அதிகமாகி விடும், என்னையே எடுத்துகொள்ளுங்கள், என் கணவர் நாட்டுக்கு இறந்தார், இதற்க்கு நான் பெருமைபடுகிறேன்" என்றார்.

 

இதை கேட்ட பயணிகளின் உறவினர்களில் ஒருவர், "இவள் விதவை ஆகிவிட்டாள் என்பதற்காக, அடுத்தவர்களையும் விதவை ஆகா சொல்கிறாள், எங்களிடம் வந்து பேச யாரிவள்" என்றார்.

 

இதே போல் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் தாய், தந்தை மற்றும் மனைவிகள் அவர்களிடம் பேசி பார்த்தார்கள். கர்னல் விரேந்திர தப்பார், கார்கில் போரில் உயிரிழந்த லெப். விஜயன்ட் தப்பாரின் தந்தை "நாட்டு மக்கள் கடத்தல்காரர்களுக்கு எதிராக ஒன்றுபடவேண்டும்", என்றார். 

 

பயணிகளின் உறவினர்கள், இதெயெல்லாம் கண்டுகொள்ளவில்லை. மீடியாவும், பெருவாரியான நாட்டுமக்களும் பினையகைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள், என்றனர். காங்கிரஸ் கட்சி, நாங்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம், அதே நேரத்தில் அரசாங்கம் அதன் தவறுகளை ஒத்துக்கொள்ள வேண்டும் என்றார்கள்.

 

டிசம்பர் 28 ஆம் தேதி, இந்திய அரசாங்கம், 3 பயங்கரமான தீவிரவாதிகளை விடுவிப்பதாக ஒத்துக்கொண்டது. அவர்கள் மௌலான மசுத் அசார், அஹ்மத் சர்கர், ஓமர் ஷேக்.  

 

டிசம்பர் 31 ஆம் தேதி, கடத்தப்பட்ட பயணிகளை மீட்க இரண்டு விமானம்  கந்தஹார் கிளம்பியது. இறுதி நேரத்தில் எதுவும் சிக்கல் வந்து விட கூடாது என ஜஸ்வந்த் சிங்ம் சென்றார், அன்று மாலை பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

 

அதற்க்கு அடுத்த நாள், கடத்தல்காரர்களிடம் சரணடைந்ததாக அரசாங்கத்தை விமரிசித்தார்கள். அரசாங்கம் மிக பெரிய தவறு செய்ததாக கூறினார்கள்.

 

நம் உறவினர்கள் அந்த விமானத்தில் இருந்தால் என்ன செய்திருப்போம், நாமும் அதேதான் செய்திருப்போம். குறிப்பாக நான் அப்படிதான் செய்திருப்பேன். கோழைத்தனத்தை ஒத்துக்கொள்ள தான் வேண்டும்... 

 

அரசாங்கத்தால் மட்டும் என்ன செய்து விட முடியும், நடந்த தவறுக்கு  அரசாங்கம் மட்டுமா பொறுப்பு, நாமும் தானே........


விடுவிக்கப்பட்ட  தீவிரவாதி.........

 

மௌலான மசுத் அசார், ஒரு இயக்கத்தை ஆரம்பித்தான் ஜெயிஸ்-இ-முஹம்மது, அந்த இயக்கம் தான் நாடாளுமன்றம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் சட்டசபை தாக்குதல்களை செய்தது.

 

ஓமர் ஷேக் 9/11 தாக்குதலுக்கு பண உதவி செய்தான்,  பின்னாட்களில்  பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டான்.

 

அஹ்மத் சர்கர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிறான்..    

 

டிஸ்கி 1 : விறுவிறுப்பு ப்ரீமியம்.காமில், இதே தலைப்பில், ஒரு தொடர் வெளிவருகிறது. இதில் கூறப்பட்ட செய்திகள், அதில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல. நான் விறுவிறுப்பு ப்ரீமியம் சந்தாதாரரும் அல்ல. 
விக்கிப்பிடியவில் ஆரம்பித்து பலதரப்பட்ட வலைதளத்தில் இருந்து கிடைக்க பெற்றது.

 

 

                                                                                                    -  நன்றிகளுடன் 

                                                                                             மகேஷ் பிரபு விஜயராஜ் 


    

தலையின் மேல் விதி - 3

டெல்லியில் நடந்த விமான விபத்து பற்றி தேடிய பொழுது, மேலும் சில விமான விவகாரங்கள் கண்ணில் பட்டது. உங்களுடன் பகிர ஆசைபடுகிறேன் (வேற வழி இல்லை, நீங்க படிச்சி தான் ஆகனும்,  தலைல எழுதி இருக்கிறத மாத்த முடியுமா).

 

கந்தஹார் விமான கடத்தல் பற்றி அநேகருக்கு தெரியும், அதை பற்றி ஒரு சிறு அலசல்..

  

1999 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 24 ஆம் நாள், நேரம் மாலை 04:25, நேபால் தலை நகர் காத்மாண்டு திரிபுவன் விமான நிலையத்திலிருந்து புது டெல்லி செல்லும்  ஏர்-இந்திய விமானம் IC-814, 178 பயனிகள் மற்றும் 15 விமான பணியாளர்களுடன் புறப்பட்டது.

 

ஹர்கத்-உல்-முஜாஹிதின் (பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கம்) இயக்கத்தை சேர்ந்த ஐந்து பேர் இந்திய பயனிகள் போர்வையில் விமானத்தில் ஏறினார்கள்.

 

விமானம் கிளம்பி 40 நிமிடங்கள் கழித்து, இந்திய வான்பரப்பின் மீது பறந்து கொண்டு இருந்த போது தீவிரவாதிகள் விமானத்தை கடத்தினார்கள். விமானத்தை பாகிஸ்தான் நோக்கி பறக்க சொன்னார்கள். லாகூரில் தரை இறங்கி, அங்கிருந்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தலாம் என திட்டம் தீட்டி இருந்தார்கள்.

 

துரதிருஷ்டவசமாக விமானம் தரை இறங்க லாகூர் விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்தார்கள். இந்த கட்டத்தில் விமானத்தில் குறைந்து அளவு எரிபொருள் இருந்தது. (பொதுவாக விமானத்தில் பயணிக்கும் தூரத்தை கணக்கிட்டே எரிபொருள் நிரப்பப்படும், தரைறங்கும் பொழுது அதிகமான எரிபொருள் இருந்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.)

 

விமானம் தரை இறக்கி ஆக வேண்டிய நிலைமையையில் உள்ளதால், அமிர்தசரஸில் விமானத்தை இறக்கலாம் என விமானி கூறினார்.

 

இந்திய மண்ணில் கடத்திய விமானத்தை தரை இறக்குவது, சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது மாதிரி தான், ஆனால் தீவிரவாதிகளுக்கு வேறுவழி இல்லை.

 

எரிபொருள் நிரப்பிய பிறகு உடனே அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்ற நிபந்தனையோடு ஒத்துக்கொண்டார்கள்.

 

மாலை 07:00 மணியளவில் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது.

 

NSG கமாண்டோக்கள் டெல்லியிலிருந்து வரும் வரை எரிபொருள் நிரப்புவதை தாமதபடுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. இப்படியாக முக்கால் மணி நேரம் ஓடிவிட்டது.

 

தாமதமாவதை உணர்ந்த தீவிரவாதிகள் விமானத்தை லாகூரூக்கு செலுத்துமாறு உத்தரவிட்டார்கள். விமானி, விமானத்தை கிளப்பாமல் எரிபொருள் நிலைமையை விளக்கிக்கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் பயணிகளை தாக்க தொடங்கினர்.

 

இந்த தாக்குதலில் ரூபின் கட்யல் (28) என்ற வாலிபர் உயிரிழந்தார் . இவர் தனது புது மனைவியுடன் நேபாளத்தில் தேனிலவிற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார் என்பதுதான் பரிதாபம். மேலும் 17 பயணிகள் காயமடைந்தனர்.

 

விமானி, வேறு வழியில்லாமல் மிக குறைந்த எரிபொருளுடன் விமானத்தை  மறுபடியும் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் கொண்டு சென்றார். இந்நிலையில் ஏதாவது பெரிய வாகனத்தை ரன்வேயின் குறுக்கே நிறுத்தி வைத்தோ அல்லது விமானத்தின் டயரை சுட்டோ, விமானத்தை தடுக்கலாம் என நினைத்தது நிறைவேறாமல் போய்விட்டது.

 

 அமிர்தசரஸிலிருந்து லாகூர் வெறும் 55 கி. மீ. தூரம் மட்டுமே....

 

மறுபடியும்  லாகூர் விமான நிலைய அதிகாரிகள், விமானத்தை தரை இறங்க அனுமதிக்க வில்லை. இதற்க்கு முத்தாய்ப்பாக தங்களது வான்பாதையையும் மூடி வைத்தார்கள்.

 

(இது தான் பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டில ஆற்றதோ)

 

வான்பாதையை மூடுவது என்பது, விமான நிலையத்தில் அனைத்து தொலை தொடர்பு சாதனங்கள், விளக்குகள் மற்றும் ஓடு பாதையில் உள்ள விளக்குகள் ஆகியவற்றை அனைத்து வைப்பதாகும்.

 

எரிபொருள் தீரும் நிலையில், விமானிக்கு வேறு வழி இல்லாததால் லாகூர் விமான நிலைய அதிகாரிகள் மறுப்பையும் மீறி தரை இறங்க முடிவு செய்தார்.

 

நன்கு வெளிச்சமாக இருந்த சாலையை ஓடுபாதை என தவறாக நினைத்து விமானத்தை கிழே இறக்கினார் . அவருக்கு ஓடு பாதையில் உள்ள விளக்குகள் அனைத்து வைத்த விபரம் தெரியாது. சாலையை நெருங்கும் சமயம், தன் தவறை உணர்ந்து, விமானத்தை மேல் எழுப்பினார்.

 

இப்பொழுது விமானம் தரை இறக்கி ஆகா வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, இல்லை என்றால் எரிபொருள் இல்லாமல் கிழே விழுந்து வெடித்து விடும். வேறு வழி இல்லாததால் லாகூர் விமான நிலைய அதிகாரிகள், இரண்டு நிபந்தனைகளோடு விமானத்தை தரை இறங்க அனுமதித்தனர், அவை,,,

 

விமானம் எரிபொருள் நிரப்பியதும், லாகூரில் இருந்து கிளம்பி விட வேண்டும்,

 

விமானத்தை விட்டு கிழே யாரும் இறங்ககூடாது.

 

எரிபொருள் நிரப்பியதும் விமானம் லாகூரில் இருந்து கிளம்பி முதலில்   காபுல் (ஆப்கானிஸ்தான்) சென்றது, அங்கே தரை இறங்க மறுக்கப்பட்டது, பின்பு மஸ்கட் (ஓமான்), அங்கேயும் மறுக்கப்பட்டது. பின்பு துபாய் சென்றது.

துபாயும் கடத்தல் விமானம் தரை இறங்க அனுமதிக்க விரும்பவில்லை. தங்களது ஓடு பாதையில் பேருந்துகளை நிறுத்தி வைத்திருந்தார்கள். அப்போதைய இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் வேண்டுகோளின்படி "Al Minhad" விமான தளத்தில் தரை இறங்க அனுமதித்தனர் (இது துபாயில் இருந்து 40 மையில் தொலைவில் உள்ளது).

 

மனிதாபிமான அடிப்படையில் விமானத்தை தரை இறங்க அனுமதித்யுள்ளோம், அவர்கள் இங்கே அதிக நேரம் தங்குவதை நாங்கள் விரும்பவில்லை என்றார்கள்.


 
 

 


கடத்தல்காரர்கள் விமான தள அதிகாரிகளிடம் உணவு மற்றும் எரிபொருள் நிரப்புமாறு கேட்டார்கள். காயம் பட்டவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவித்தால் ஏற்பாடு செய்வதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினார்கள்.

இதற்க்கு கடத்தல்காரர்கள் ஒத்துக்கொண்டார்கள்.

                        

ரூபின் கட்யல் இறந்த உடல் மற்றும் 27 பயணிகளை விடுவித்தனர்.

 

இதே சமயத்தில் அமிர்தசரஸ் விமான நிலையத்திலிருந்து IL-76 எனும் விமானத்தில் NSG கமாண்டோக்கள், பயணிகளை மீட்க்க துபாய் நோக்கி சென்றனர். துபாய் விமான நிலையத்தில் ரன்வே அடைத்து வைக்கப்பட்டதால் திரும்பி வந்துவிட்டனர். (அந்த ரன்வே மட்டும் அப்பொழுது திறந்திருந்தால் விதி மாறி இருக்கும், இந்தியாவும் தலைகுனிவை சந்தித்திருக்க வேண்டாம்)..

 

அடுத்த நாள் காலை, டிசம்பர் 25 விமானம் கந்தஹார் சென்றது....................

         

பதிவின் நீளம் அதிகமாகிவிட்டதால், இதன் முடிவு அடுத்த பதிவில் வரும்.............

டிஸ்கி 1 : விறுவிறுப்பு ப்ரீமியம்.காமில், இதே தலைப்பில், ஒரு தொடர் வெளிவருகிறது. இதில் கூறப்பட்ட செய்திகள், அதில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல. நான் விறுவிறுப்பு ப்ரீமியம் சந்தாதாரரும் அல்ல. 

விக்கிப்பிடியவில் ஆரம்பித்து பலதரப்பட்ட வலைதளத்தில் இருந்து கிடைக்க பெற்றது.



 
                                                                                                    -  நன்றிகளுடன் 
                                                                                      மகேஷ் பிரபு விஜயராஜ் 


வியாழன், 6 நவம்பர், 2014

சரோஜா அக்கா - பெருமாள் மாமா - 2

இதுக்கு முன்னாடி என்ன நடந்தது............. இங்கே பாருங்க..........

 
 

நம்ம பெருமாள் பத்தி நெறைய சொல்லலாம், சாம்பிளுக்கு ஒன்னு, ரெண்டு பாப்போம்.       

பிளாஷ் பேக் : 1

 

நம்ம பெருமாள் ஸ்கூல் முடிச்சிட்டு வெளியூர்ல காலேஜ் ஜாயின் பண்ணி இருந்தான். சீனியர் கூப்பிட்டு பெருமாளை கலாய்த்து கொண்டு இருந்தனர்.

 

சீனியர், "எந்த ஊர் டா நீ ?"

 

பெருமாள், "அண்ணா அருப்புக்கோட்டைனா".

 

 சீனியரும் அருப்புக்கோட்டைதான், உடனே தம்பி மேல பாசம் பொங்கி வந்தது.

 

ஊர்ல இருந்து த்ரூ பஸ்லயாட (Direct Bus) வந்த ?

 

இல்லை அண்ணா, பெயிண்ட் அடிச்ச பஸ்ல தான் அண்ணா வந்தேன்.

 

என்ன நக்கலாடா ?, ஒரே ஊர்ங்கிறதால உன்னை சும்மா விடுறேன், ஓடி போய்டு.

 

அன்னிக்கு பெருமாள் எஸ்கேப்.

 

 

பிளாஷ் பேக் : 2

  

ஒரு மாசம் கழித்து அதே சீனியர்,

 

என்னடா தம்பி ரெண்டு மூணு நாளா உன்னை ஆள காணோம், ஊருக்கு போயிருந்தியா ?

 

ஆமா அண்ணா.

 

தனியாவா ஊருக்கு போட்டு வந்த ?

 

இல்லைனா, பஸ்ல டிரைவர், கண்டக்டர் அப்புறம் நெறைய பாசஞ்சர் வந்தாங்க.

 

சீனியர் வெறி ஆகி, ஒரு நாள் முழுவதும் ஹாஸ்டல் ரும் ஸ்லாபில் உக்கார வைத்து விட்டார்.

 

 

பிளாஷ் பேக் : 3

 

எல்லா காலேஜ் மாதிரி நம்ம பெருமாள் காலேஜ்லையும் ஒரு ஸ்ட்ரிக்ட் வாத்தியார். ஒரு நாள் கேள்வி கேட்டு பசங்கள லேப்ட் ரைட் வாங்கிகிட்டு  இருந்தார். நம்ம பெருமாள் டர்ன் வந்தது.

 

"பெருமாள், கெட்-அப்", வாத்தியார்.

 

பெருமாள் மிலிடரி கெட்-அப்பில் வணக்கம் வைக்க,

 

"நான் என்ன மிலிடரிக்கா மென் ஆள் எடுக்கிறேன், ஓகே நவ் அன்சர் மை கொஸ்டீன் ", வாத்தியார்.

 

"எஸ் சார்", பெருமாள்.

 

"வாட் இஸ் தி ரா மேடிரியல் பார் பேப்பர்", வாத்தியார்.

 

"சார்", பெருமாள்.

 

"எதிலிருந்து பேப்பர் தயாரிக்கப்படுகிறது", வாத்தியார்.  

 

"            ", பெருமாள் 

 

"காமான் மென்", வாத்தியார்.  

 

"தெரியல                                  சார்", பெருமாள்.

 

"இடியட், உன் முன்னாடி ஒரு பேப்பர் இருக்குல்ல, அத பார்த்தாவது சொல்லு மென்", வாத்தியார்.  

 

"அது வெள்ளை பேப்பர் சார், ஒண்ணுமே எழுதலை, நீங்களே பாருங்க, அத பார்த்து எப்படி சார் சொல்றது", பெருமாள்.

 

"ஸ்டுபிட், நான்சென்ஸ், கெட் அவுட் பரம் மை கிளாஸ், ஹியர் ஆப்டர் யு ஷ்ட் நாட் என்ட்டர் மை கிளாஸ்", வாத்தியார்.    

 
 
நன்றி : கூகிலாண்டவர் 
 

அப்புறம் என்ன, அந்த செமெஸ்டர் புல்லா, பெருமாள் அவுட் ஸ்டான்டிங் ஸ்டுடென்ட் தான்....  

                                                                                                              - நன்றிகளுடன் 

                                                                                                      மகேஷ் பிரபு விஜயராஜ் 


  

புதன், 5 நவம்பர், 2014

Happy New Year - Nanayam

சமீபத்தில் வெளியான Happy New Year படம் பார்த்தேன். அந்த படம் 2010ல் வெளி வந்த நாணயம் படத்தை நியாபகம் படுத்தியது.

 

Happy New Year:

 
 

 

ஷாருக்கான் அப்பா ஒரு பாதுகாப்பு பெட்டகங்கள் தாயாரிக்கும் நிறுவனம் வைத்துள்ளார். வில்லன் அவரிடம் யாராலும் திறக்க முடியாத ஒரு லாக்கரை செய்ய சொல்கிறான். ஷாருக்கான் அப்பா அப்படி ஒரு லாக்கர் செய்து அதற்க்கு ஷாலிமார் என பெயர் வைக்கிறார். அதில் 100 கோடி ரூபாய் வைரங்களை ஷாருக்கானின் அப்பா பொறுப்பில் வைக்கிறான். அது ஷாருக்கான் அப்பா கைரேகை வைத்தால் மட்டுமே திறக்கும், அவருக்கு போதை மருந்து கொடுத்து, அவர் கைரேகையை பயன்படுத்தி வில்லனே அந்த வைரங்களை கடத்துகிறான். ஷாருக்கான் அப்பாவிற்கு 12 ஆண்டு கடுங்காவல் தண்டனை கிடைகிறது. அவர் மனமுடைந்து சிறையில் தற்கொலை செய்து கொள்கிறார். வில்லன் அந்த லாக்கர் டிசைன் வைத்து பெரும் பணக்காரன் ஆகிறான்.

 

8 வருடம் கழித்து, அகில உலக நடன போட்டி நடக்கிறது. அதில் 300 கோடி ரூபாய் வைரங்களை காட்சிக்கு வைக்கிறார்கள். பாதுகாப்பிற்காக ஷாலிமாரில் வைக்கிறார்கள். ஷாருக்கான், தன் அப்பாவின் நண்பர்களின் உதவியோடு அந்த வைரங்களை கடத்தி வில்லனை சிறைக்கு அனுப்பலாம் என திட்டம் போடுகிறார். அந்த கடத்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக அகில உலக நடன போட்டியிலும் பங்கு பெறுகின்றனர்.

 

அவர்களால் வைரங்களை கடத்த முடிந்ததா, நடன போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தார்களா என்பது தான் மீதி கதை. (நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியனுமா)...

 

நாணயம் :

 
 
 

பிரசன்னா ஒரு வங்கியில் சேருகின்றார், அந்த வங்கியின் உரிமையாளர் SPB, அவர் பிரசன்னாவிடம் பாதுகாப்பான லாக்கர் சிஸ்டம் செய்ய சொல்கிறார். பிரசன்னாவிற்கு ஒரு கேர்ள் பிரண்ட் அறிமுகமாகிறார். வில்லன் (சிபி), அந்த கேர்ள் பிரண்ட்டை கடத்தி வைத்துக்கொண்டு பிரசன்னாவிடம் அந்த லாக்கரை உடைத்து தர சொல்கிறார். லாக்கரை உடைத்து திருடும் வேளையில் சிபியை வீழ்த்தி உண்மையை கண்டு பிடிக்கிறார்.

 

அது என்னவென்றால் SPBயின் தகாத உறவு பற்றி அடங்கிய ஒரு டயரி அந்த லாக்கரில் உள்ளது. பணத்தை திருடுவது போல் அந்த டயரியை திருட வேண்டும்.

 

இறுதயில் SPB தற்கொலை செய்து கொள்கிறார்..... 

 

இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் கதை தளம் ஒன்றுதான், ஆனால் திரைகதையில் தான் ஏகப்பட்ட வித்தியாசம்.

 

லாக்கரை உடைப்பதின் நோக்கம்..., 

 

தந்தையின் மரணத்திற்காக ஷாருக்கான்  பழிவாங்குவது....  

 

கள்ளக்காதல் வெளியே தெரிய கூடாது என்பதற்காக.... 

 

கிளைமாக்ஸ்...,

 

திருடிய பின் மாட்டிக்கொள்ள வாய்ப்பிருந்த பொழுதும் இந்தியாவின் மானம் போக கூடாது என தப்பி போகாமல் நடனம் ஆடி முதல் பரிசு வாங்குகிறார்கள் (இது டூ மச் என்றாலும் ரசிக்க வைத்தது).  

 

சஸ்பென்ஸ் என்ற பெயரில் SPB காட்டி சப்பையாக முடித்திருந்தார்கள்.  

 

லாக்கரை உடைக்கும் முயற்சி ஏறக்குறைய ஒன்று என்றாலும், லாக்கரில் இருந்து வெளியே வரும் முறை Happy New Yearயில் சற்று வித்தியாசமாக யோசித்திருந்தார்கள். மொத்தத்தில் Happy New Year நாணயத்தை விட பல மடங்கு சிறப்பாக இருந்தது.

 
டிஸ்கி : முத முதல்ல சினிமா விமர்சனம் எழுதி இருக்கேன்,  இத விமர்ச்சி ஏதாவது சொல்லுங்க..........   



  

  

புதன், 29 அக்டோபர், 2014

சென்னை to தூத்துக்குடி

 எந்த வருஷ தீபாவளிக்கு இல்லாத சிறப்பு இந்த வருஷ தீபாவளிக்கு உண்டு. அது என்னானு கேக்குறீங்களா....

 

+2 முடிச்சிட்டு, காலேஜ், வேலைன்னு வெளியூர் வந்ததுக்கு அப்புறம் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஊருக்கு போறதுக்குள்ள நொந்து நூடுல்ஸ் ஆகிருவேன்.

 

ஒன்னு டிக்கெட் புக் பண்றதுல ஏகப்பட்ட போராட்டம் நடக்கும், இல்ல டிக்கெட் புக் பண்ணாம டிராவல்ல போராட்டம், ரெண்டும் இல்லைனா டிக்கெட் புக் பண்ணியும் டிராவல்ல போராட்டம், இப்படி ஏதாவது காமெடி நடக்கும்.

 

ஒரு கொசுவத்தி சுருள் பத்தவச்சிகோங்க...................

 

இப்படிதான் 2007 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ட்ரைன்ல டிக்கெட் புக் பண்ணன கூத்த கேளுங்க.............

 

அந்த வருஷம் தீபாவளி வியாழகிழமைனு நினைக்கிறன். செவ்வாய்கிழமை நைட் தூத்துக்குடிக்கு கிளம்புற முத்து நகர் அதிவிரைவு வண்டில (22 இல்ல 23 ஸ்டாப்ன்னு நினைக்றேன்)  டிக்கெட் புக் பண்ணறதுக்கு 60 நாளை குத்து மதிப்பா கணக்கு போட்டுக்கிட்டு அதுக்கு முத நாள் அலாரம் வச்சிட்டு படுத்தேன்.

 

எத்தன மணிக்கு அலாரம் வச்சேன் தெரியுமா காலைல 7 மணிக்கு. நான் தங்கி இருந்த வீட்ல இருந்து St. தாமஸ் மௌண்ட் ரயில்வே புக்கிங் ஸ்டேஷன் 100 மீ தான் இருக்கும்.

 

குளிக்காம கொள்ளாம ஸ்டேஷன் போனா எனக்கு முன்னாடி ஒரு 30 பேரு நின்னாங்க. Q-ல வெயிட் பண்ணி டிக்கட் புக் பண்ணிட்டு வந்தாச்சு.

 

தீபாவளி வியாழகிழமைங்கிறதால ஊருக்கு போறவைங்க செவ்வாய் அல்லது புதன்கிழமை போவாங்க, ஆனா திரும்பி வரவிங்க எல்லாம் ஞாயிற்றுகிழமை தான் வருவாங்கன்னு ப்ரில்லியண்டா (?????) யோசிச்சி காலைல 5:30க்கே ஸ்டேஷன் போனேன்.

 

 அங்க போனா எனக்கு முன்னாடி சுமார் ஒரு 90 பேரு நின்னுகிட்டு இருந்தாங்க, தம் கட்டி எண்ணுனோம்ல, 8 மணி வரைக்கும் பொழுது போக வேற வழி. அதுல ரெண்டு தெரிஞ்ச மூஞ்சி இருந்தது.

 ஒருத்தன் 10 வது ஆளா நின்னுகிட்டு இருந்தான், இருத்தன் 18 வது ஆளா நின்னுகிட்டு இருந்தான். ரெண்டு பெரும் ஒரே ரூம் தான்.

 

 

 

 

எதுக்கு ரெண்டு பேரும் புக் பண்ண வந்தாங்கன்னா ரெண்டு பேரும் வேற வேற ஊர். ஒருத்தரே 2 form குடுக்கலாம் சில சமயம் புக் பண்ற அதிகாரி ஸ்ட்ரிக்டா இருந்தார்னா ஒரு formக்கு மேல வாங்க மாட்டார். அதனால ஒருத்தன் பின்னாடி ஒருத்தன் வந்து இருக்காங்க.

 

விடாபிடியாக ரெண்டரை மணி நேரத்தை தள்ளின பிறகு, புக்கிங் ஆரம்பிச்சது.....

 

கவுன்ட்-டான் ஸ்டார்ட்ஸ்....

 

நல்லவேளையா, 10 வது ஆளா நின்ன நண்பன்கிட்டயே 2 formயும் வாங்கிட்டாரு, அதனால நான் 18 வது ஆளா நின்ன நண்பன் இடத்தில போய் நின்னுட்டேன்.

 

என்னோட முறை வரப்போ 8:21am (இன்னும் நல்ல நியாபகம் இருக்குது),

 

புக்கிங் கிளார்க் டொங்கடி டொங்கடி எங்க பேர் ஊர் எல்லாம் அடிச்சார்,

அது என்ன மாயமோ தெரியல, என்ன மந்திரமோ தெரியல, ஊரெல்லாம் விண்டோஸ் 7, 8, 8.1, XP என்னென்னமோ வந்தாலும் கூட இன்னும் ரயில்வே ரிசர்வேசன் மட்டும் DOS-MODE ல தான் ஆபரேட் ஆகிட்டு இருக்குது... 

 

டிக்கட் வெயிட்டிங் லிஸ்ட் 17ல இருக்கு புக் பண்ணவானு கேட்டார்.

 

உடனே, நான் புக் பண்ணுங்கனு சொன்னேன்.

 

பிரிண்ட்டான டிக்கட்ல பார்த்தா வெயிட்டிங் லிஸ்ட் 23. 

 

அவர் கேட்டதுக்கும், நான் புக் பண்ணுங்க சொன்னதுக்கும் நடுவில அரை  செகண்ட் ஆகிருக்குமாங்க ?

 

அந்த கேப்ல 6 பேர் உள்ள புகுந்திருக்காங்க..........  

 

எனக்கு அப்பவோ கண்ண கட்டிருச்சி....................             

 

அன்னிக்கு சாயங்காலம் மாலை மலர்ல, சென்னை எக்மோரில் முதல் டிக்கட் வாங்கிய 2 பெண்மணின்னு பேட்டி போட்டோவோட வந்திருந்தது.

 

எனக்கு சத்தியமா மன்னன் படம் நியாபகம் வரலைங்கோ சொன்னா நீங்க நம்பவா போறீங்க............

 

      

டிஸ்கி : என்னடா அந்த சிறப்ப சொல்லவே இல்லைங்றீங்களா,

இந்த வருஷம் தீபாவளிக்கு டிக்கட் புக் பண்ண வேண்டிய அவசியம் இல்லாம போச்சு, ஏன்னா தீபாவளி நேரத்தில இத்தாலில மாட்டிகிட்டேன்......

 

வெள்ளி, 24 அக்டோபர், 2014

தமிழன் தோன்றிய இடம் !!!!!

தமிழன் முதன் முதலில் எந்த ஊரில் வாழ்ந்திருப்பான் ???

 

சென்னை -

 

சென்னை இன்னைக்கு தான் தமிழ் நாட்டோட தலை நகர். அதோட வரலாறு வெறும் 396 வருஷம் தான், அதனால இப்போதைய தலைநகரத்தை விட்டு விடுவோம், பழைய தலைநகரம் எதாவது இருக்குமா,

 

சோழ தலைநகர் தஞ்சாவூரா , பாண்டிய தலைநகர் மதுரையா, சேரர்களின் தலைநகர் வஞ்சியா இல்லைனா பல்லவர்களின் தலைநகர்  காஞ்சியா ?????

 

ரெம்ப குழப்பமா இருக்குதுல்ல......

 

குழம்பவே வேண்டாம்,

 

தமிழன் தோன்றிய இடம் பழனியாகத்தான் இருக்கணும்..

 

எல்லாரும் திருவிளையாடல் படம் பார்த்திருப்போம்

 

மாம்பழத்துக்காக பிரச்சனை வந்தப்பொழுது, முருகன் கோவிச்சிக்கிட்டு சொன்ன வார்த்தை, 

 

"எனக்குன்னு ஒரு மக்கள், எனக்குன்னு ஒரு நாடு உருவாக்கிகிட்டு, என் நாடு என் மக்கள்ன்னு வாழப்போறேன்னு" முருகன் சொல்லிட்டு வந்து நின்ன இடம் எது ???

  

பழனி 

 


 
 

 
 

நாம முருகனையே ஆதி தமிழனா நினைச்சி வணங்குறோம்,

அதனால  தமிழன் தோன்றிய இடம் பழனியாகத்தான் இருக்கணும்..

 
 
டிஸ்கி - பெருமாள்ன்னு ஒரு நண்பர் சொன்ன விஷயம் இது, பிடிச்சிருந்ததால வலையுலகத்துகுள்ள கொண்டு வந்துட்டேன்..... 

புதன், 15 அக்டோபர், 2014

ரோமானிய சதுக்க பூதம்

நமக்கு தெரிஞ்ச சோழ வரலாற்றில் கவேரிபூம்பட்டிணம் அப்படின்னு கேட்டா முதல்ல நினைவுக்கு வர்றது நாளங்காடி அப்புறம் சதுக்க பூதம் சிலை.


சதுக்க பூதத்தை சாட்சியா வச்சிக்கிட்டு பொய் சொன்னா, அந்த பூதம் தண்டனை தரும் அப்படிங்கிறது அந்த கால மக்களோட நம்பிக்கை.


சதுக்க பூதத்தை பற்றி எனக்கு தெரிந்த கதை,,


விவசாயி ஒருவர் வெளியூர் செல்ல வேண்டி இருந்தது. கள்வர்களின் தொந்தரவு அதிகம் இருந்ததால் தன்னிடம் உள்ள 100 பொற்காசுகளை தன் நண்பரிடம் கொடுத்து விட்டு, திரும்ப வந்து பெற்று கொள்கிறேன் என கூறி சென்றார்.


ஊர் திரும்பிய பிறகு, நண்பரை பொது இடத்தில் சந்தித்தார், பயணம் குறித்து இருவரும் பேசிக்கொண்டுயிருந்தார்கள், நண்பராக பொற்காசுகளை தருவார், நாம் கேட்டால் மரியாதையாக இருக்காது என விவசாயி ஏதும் கேட்க்காமல் வீடு திரும்பி விட்டார்.


நண்பர் பொற்காசுகளை பற்றி மூச்சு விடவில்லை, நாட்கள் சென்றது, விவசாயி வேறுவழி இல்லாமல் வாய் விட்டே கேட்டு விட்டார்.


"ஏனப்பா என் பொற்காசுகளை எப்போது கொண்டு வந்து தருவாய்" என விவசாயி கேட்டார்.


"நான் பொது இடத்தில வைத்து சந்தித்த பொழுதே அதை கொடுத்து விட்டேனே" என்றார் நண்பர்.


இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ஊர் சபைக்கு இந்த வழக்கை எடுத்து சென்றனர்.


ஊர் சபையினரால் ஒரு முடிவுக்கு வர  முடியவில்லை.


நீங்கள் இருவரும் சதுக்க பூதத்தை சாட்சியாக வைத்து உங்கள் தரப்பு நியாங்களை கூறுங்கள், பொய் சொல்பவர்களை அந்த பூதமே தண்டிக்கட்டும் என்றனர்.


சதுக்க பூதத்தின் முன்னிலையில்  முதலில் விவசாயி, நண்பர் 100 பொற்காசுகளை தரவில்லை என்றார்.


நண்பர் கையில் ஓரூ தடி வைத்திருந்தார், அதை விவசாயிடம் கொடுத்துவிட்டு, நான் 100 பொற்காசுகளை விவசாயிடம் கொடுத்து விட்டேன் என்று கூறிவிட்டு கைதடியை வாங்கிக்கொண்டார்.  


பொய் சொன்னவரை சதுக்க பூதம் தண்டிக்கும், சபை நாளை கூடி விசாரிக்கும் என்று ஊர் சபை களைந்து விட்டது.


மறுநாள் இருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை, சதுக்க பூதம் பொய் சொன்னவரை தண்டீத்திருக்க வேண்டுமே, ஒன்றும் ஆகவில்லையே என ஊர் சபை வியந்தது. 


நண்பர் வைத்திருந்த கைதடியை சந்தேகப்பட்டு உடைத்து பார்த்த பொழுது, அதில் 100 பொற்காசுகள் ஒழித்து வைக்கப்படிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைத்தது.  

 
அதேப்படி ஒரு சிலை தண்டனை தரும், வேற எந்த நாட்டிலையாவது இப்படி டுபாக்கூர் கதை விடுவாங்களா நம்ம தமிழ் நாட்லதான்யா லாஜிக்கே இல்லாமா கதை சொல்லுவாங்க அப்படின்னு அந்த மாதிரி கதைகள கிண்டல் பண்ணி மறக்க ஆரம்பிச்சிட்டோம்.....


இத்தாலி தலைநகர் ரோம்லையும் இதே மாதிரி ஒரு சிலை இருக்கு, அதன் பெயர் "போக்க டெல் வெரிட்டா" (உண்மையின் வாய்).  



இந்த சிலை ஒன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது என்று நம்பப்டுகிறது...


இந்த சிலையின் வாயில் கை வைத்து உண்மை பேச வேண்டும், பொய் சொன்னால் அந்த சிலை கையை கடித்து விடும் என்பது நம்பிக்கை.


இங்கேயும் ஒரு சுவாரசியமான கதை இருக்கு,,,,


ஒரு கணவனுக்கு தன் மனைவி இன்னொரு ஆடவனுடன் தொடர்பு வைத்திருக்கிறாள் என சந்தேகம் வந்தது.


மனைவியை சிலையின் வாயில் கை வைத்து நிரூபிக்க சொன்னான்.
மனைவி சிலையின் வாயில் கை வைக்கும் பொழுது, அங்கு அமர்ந்திருந்த ஒரு பிச்சைகாரன் மனைவிக்கு முத்தம் குடுத்துவிட்டு வேகமாக ஓடி விட்டேன். அருகில் இருந்தவர்கள் அவனை துரத்திச்சென்றனர்.


இந்த நேரத்தில் மனைவி, சிலையின் வாயில் கையை வைத்து, "இது வரையில் எனக்கு என் கணவன் மற்றும் அந்த பிச்சைக்காரன் மட்டுமே முத்தம் கொடுத்திருக்கிறார்கள்" என்றாள்.


அவள் கைகளுக்கு ஒன்றும் ஆகவில்லை. கணவனுக்கு ஒரே ஆச்சர்யம்..


இந்நிலையில் அந்த பிச்சைகாரனை துரத்தி சென்றவர்கள், அவனை பிடித்து விசாரித்த பொழுது தான் தெரிந்து, அவன் தான் அந்த மனைவியின் காதலின் என்றும், அவளை காக்கவே பிச்சைகாரன் வேடம் போட்டு உக்காந்திருந்தான் என்று.


இன்று ரோமில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசயில் நின்று அந்த சிலையை பார்கிறார்கள். வரலாற்றை அறிந்து வியக்கின்றார்கள்.


நம்மிடையே இதே போல் ஆயிரம் ஆயிரம் கதைகள் உண்டு, வரலாறு உண்டு. நாமே நம்மை மறந்து விட்டோம், மற்ற நாட்டவர்களுக்கு எங்கிருந்து சொல்ல............... 


இனிமேல் சொல்ல முயற்சிப்போம், வருங்காலத்திற்கு எடுத்து சொல்வோம்.


பின்குறிப்பு : அந்த சிலையை பார்த்து வருத்தத்தில் எழுதிய பதிவே இது..........

- மகேஷ் பிரபு விஜயராஜ் 




After a short Break

ஒரு பதிவு போட்டு ரெம்ப நாளாச்சு,,,,


 நான் ரெம்ப பிஸி அப்படின்னு சொன்னா இந்த உலகம்............

                       




உங்க மைன்ட் வாய்ஸ் கேக்குது......


நான் மறுபடியும் ஆட்டத்துக்குள்ள வந்துட்டேன், 


அடுத்த பதிவில் விரைவில் சந்திப்போம்...

- மகேஷ் பிரபு விஜயராஜ் 






  

வெள்ளி, 27 ஜூன், 2014

மெட்ரிக் யூனிட் சிஸ்டம்

நண்பர்கள் அனைவரும் மெட்ரிக் யூனிட் (Metric Unit) சிஸ்டம் பற்றி கேள்வி பட்டிருப்பிர்கள்.

உதாரணமாக, நீளம் மற்றும் உயரத்தை மீட்டர் கணக்கில் அளப்பது.


உலகில் அனைத்து நாடுகளும் இந்த முறையை பயன்படுத்தும் பொழுது மூன்று நாடுகள் மட்டும் பிடிவாதமாய் பயன்படுத்தாமல் இருக்கிறது.
அவை எந்த நாடுகள் என தெரிந்தால் ஆச்சர்யபடுவீர்கள்.

1. ஐக்கிய அமெரிக்க இராச்சியம் (United States of America)     
2. பர்மா (அ) மியன்மார் (Burma)
3. லிபீரியா (Liberia)



படம் - இணையத்திலிருந்து 



திங்கள், 16 ஜூன், 2014

இது எப்புடி இருக்கு

இது எப்புடி இருக்கு, பாருங்களேன்...........

இடம் : பாரிஸ் நகரில் ஒரு பூங்கா....




மென்பொருள் நிறுவனத்தை சேர்ந்த இரண்டு இந்தியர்கள் புல்வெளியில் அமர்ந்து ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்தார்கள். 


ஒருவர் ஆஷிஷ், பீகாரை சேர்ந்தவர், இன்னொருவர் நம்ம ஊர் சிங்க குட்டி ஆனந்த்.


இருவரும் மூன்று மாத காலத்திற்கு, பாரீஸில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

இவர்களின் உரையாடல்களை ரெம்ப நேரம் கவனித்து கொண்டிருந்த ஒரு பாகிஸ்தானியர் இவர்களை அணுகினார். அறிமுக படலம் முடிந்ததும், நம்ம ஆனந்தை பார்த்து, நீ தமிழ் நாட்டை சேர்ந்தவனா என கேட்டார்....


ஆனந்துக்கு ஆச்சர்யம் தாளவில்லை, வாய்விட்டே கேட்டுவிட்டார் எப்படி கண்டுபிடித்தார் என்று.


அதற்கு அந்த பாகிஸ்தானியர், "இரண்டு இந்தியர்கள் பொதுவாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்தால், அதில் ஒருவர் கட்டாயமாக தமிழ் நாட்டை சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும், ஸ்கின் கலரை வைத்து ஆனந்த் தமிழராக இருக்கலாம் என கணித்தேன்", என்றார்.


இது எப்புடி இருக்கு........



தமிழ், தமிழ் என பேசி தேசிய நிரோட்டத்தில் கலக்காமல் விட்டு விட்டோம், கொஞ்சமாவது ஹிந்தியை கற்று இருந்திருக்கலாம். தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலைமை வந்தால் தடுமாற வேண்டிய அவசியமில்லை.

ஒரு காலத்தில் எதற்கு ஹிந்தி, ஏன் ஹிந்தி, வேனும்னா அவங்கள தமிழ் கத்துக்க சொல்லு என்று வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் வாய் சவடால் விட்டு இருக்கிறேன். 

இப்பொழுது ஆத்தா ஹய், தாத்தா ஹய் என டெல்லி வீதியில் காமெடி பண்ணிக்கிட்டு இருக்கிறேன். நான் டைலாக் விட்டவன் எல்லாம் திருப்பி என்னை கலாய்க்குறாங்க... 

சும்மாவா சொன்னங்க பட்டால் தான் நமக்கு புரியும் என்று........  

இப்போ எனக்கு புரிஞ்சிருச்சி, நீங்க இன்னா சொல்றீங்க பாஸ்...    


டிஸ்கி : என் நண்பர் ஒருவருக்கு அயல்நாட்டில் ஏற்பட்ட அனுபவத்தோடு, என் புலம்பல்களையும் மிக்ஸ் பண்ணி ஒரு பதிவு ஆக்கியாச்சு ..... 

புதன், 11 ஜூன், 2014

தலையின் மேல் விதி - 2


இந்த பதிவின் முந்தைய அத்தியாயைத்தை படிக்க இந்த சுட்டியை சொடுக்கவும்



இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த டெல்லி உயர் நிதிமன்ற நிதிபதி ரமேஷ் சந்திரா லகோடி தலைமையில் விசாரணை கமிசன் அமைக்க பட்டது.

இரண்டு விமான உடைபாடுகளுக்கு நடுவில் கண்டு எடுக்க பட்ட கருப்பு பெட்டியை வைத்து ஆராய்ந்து பார்த்ததில், கஜகஸ்தான் விமானி கன்ட்ரோல் டவரின் அதிகாரியின் தரை இறங்குதல் அறிவுரைகளை முழுவதுமாக பின்பற்றாது தான் விமான விபத்திற்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டது.

இந்த விபத்திற்கு மேலும் சில காரணங்கள் கண்டறியப்பட்டது, அவை,

1. நிறைய கஜகஸ்தான் விமானிகள் ஆங்கில உரையாடல்களில் நன்கு  தேர்ச்சி பெறாதவர்களாக இருந்தார்கள், அதனால் அவர்கள் கன்ட்ரோல் டவருடன் நடைபெறும் உரையாடலுக்கு ரேடியோ ஆப்பரேட்டர்களையே பெரிதும் நம்பி இருக்க வேண்டி இருந்தது. ரேடியோ ஆப்பரேட்டர்களுக்கென்று தனியாக கருவிகள் கிடையாது, தேவை என்றால் விமானியின் கருவியை தான் ரேடியோ ஆப்பரேட்டர் பார்த்துக்கொள்ளலாம், அதனால் எப்பொழுதும் கன்ட்ரோல் டவர் உரையாடலுக்கும், விமானியின்  செயல்பாட்டுக்கும் சிறுது நேர இடைவெளி இருக்கும். 

 2. பொதுவாக விமானங்களில் FPS யூனிட் சிஸ்டம் பின்பற்றபடும் (உயரம், 'அடி' கனக்கில் அளவிடப்படும்), அனால் ஜகஸ்தான் விமானங்களில் உள்ள கருவிகளில் மெட்ரிக் (Metric) யூனிட் சிஸ்டம் பின்பற்றபடுகிறது (உயரம், 'மீட்டர்' கனக்கில் அளவிடப்படும்). 

3. புது டெல்லி விமான நிலையத்திற்கு பல காற்றுப்பாதைகள் (Airway) இருந்தாலும், அதில் ஒரு பாதை மட்டுமே வர்த்தக போக்குவரத்துக்காக   பயன்படுத்தப்பட்டது, மற்ற பாதைகள் வான்பாதுகாப்பு படை வசம் இருந்தது. இதனால் ஒரே காற்று பாதையில் தான் விமான நிலையத்திற்கும் உள்ளே வரும் விமானமும் வெளியே போகும் விமானமும் பயன்படுத்த வேண்டும்.   

4. விபத்து நடந்த பொழுது, புது டெல்லி விமான நிலையத்தில் முதல்  கட்ட  கண்காணிப்பு ராடார் மட்டுமே நிறுவப்பட்டிருந்தது. இந்த ராடார்  உதவியால்  விமானம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதை மட்டுமே கண்டறியலாம் இரண்டாம் கட்ட கண்காணிப்பு  ராடார் இல்லாததால் விமானத்தின் உயரத்தை கண்டறிய முடியாது.          

இப்படியாக வரிசையாக காரணங்களை அடுக்கியது விசாரணை அறிக்கை, மேலும் சில அறிவுரைகளை வழங்கியது, அவை,

1. புது டெல்லி விமான நிலையத்திற்கு உள்ளே வரும் விமானத்திற்கும், வெளியே போகும்   விமானத்திற்கும் தனி தனி காற்றுப்பதை (Airway) அமைக்கவேண்டும்.

2. விமான நிலையத்தின் சுற்றுபுறத்தில் பறந்து கொண்டிருக்கும்  விமானங்களின் உயரத்தை அளவிட, இரண்டாம் கட்ட கண்காணிப்பு  ராடார் நிறுவப்பட வேண்டும்.

3. மோதல் தவிர்ப்பு இயந்திரம் (TCAS - Traffic Collision Avoidance System)அனைத்து விமானத்திலும் நிறுவப்பட வேண்டும். இந்த இயந்திரம் விமானத்தை சுற்றி குறிப்பிட்ட தூரம் வரை உள்ள விமானம் குறித்து தகவல்களை அளிக்கும். 

இரு விமானத்தில் உள்ள பயணிகள் தங்களது விலைமதிப்பில்லா உயிரை கொடுத்து, மேல கூறிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 



மலேசிய விமான விபத்திற்க்கு கூட இதே போல் எதோ காரணம் இருக்கும், அது என்னவென்று கண்டுபிடித்து அதை சரி செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், வருங்காலத்தில் விபத்தில்ல பயணம் மேற்கொள்ள வழி வகை செய்ய வேண்டும்.

வந்தபின் சிகிச்சை என்பதை விட வரும்முன் காப்போம் என்பது சாலச்சிறந்தது....