வியாழன், 13 நவம்பர், 2014

பயணங்கள் பலவிதம் - 2


பயணத்தோட ஆரம்பத்தையும் தெரிஞ்சிக்க இங்கே ஒரு தட்டு தட்டுங்க ....


புடாபெஸ்ட் என்பது புடா மற்றும் பெஸ்ட் என்னும் இரு நகரங்கள் சேர்ந்ததாகும். இந்த இரு நகரங்களுக்கு இடையே தானுபே (Danube) என்னும் நதி ஓடுகிறது.

Chain Bridge, புடாபெஸ்ட்ல் பார்க்க வேண்டிய முக்கியமான இடம், இந்த பாலம் 1820 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இதற்க்கு முன்பு வரை மரக்கட்டைகளால் ஆன பாலம் இருந்தது, இதை ஒவ்வொரு குளிர் காலத்திலும் அப்புறபடுத்தி விடுவார்கள். (குளிரியில் மரக்கட்டைகள் உடைந்துவிடும் என்பதால்), இதை Pontoon Bridge என்பார்கள்

(ரெம்ப அறிவாளின்னு நினைக்கதீங்க, கூகிளாண்டவர்  சொல்லித்தான் எனக்கு தெரியும், நினைக்க மாட்டீங்கள்ள ??? ).



                                         பட உதவி : நம்ம கூகிளாண்டவர் தான்

Count István Széchenyi என்று, ஒரு ஹங்கேரியன் புரட்சியாளர் இருந்தார், அவர் தந்தை ஆற்றின் மறுகரையில் இறந்து போனார். குளிர் காலம் என்பதால் இவரால் ஆற்றை கடக்க  முடியவில்லை. அப்பொழுது தான் ஒரு நிரந்தர பாலத்தை உருவாக்க முடிவு செய்தார். 

பாலத்தின் இருகரையிலும், இரண்டு சிங்க சிலைகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த சிங்கங்களுக்கு பின்னால் ஒரு கதை உள்ளது.

இதை Marschalko Janos என்பவர் வடிவமைத்தார். அவர் சிங்கங்களுக்கு நாக்கை செதுக்க மறந்து விட்டார், இதை பாலத்தின் திறப்பு விழாவின் சமயத்தில் ஒரு சிறுவன் கவனித்து சொன்னான். மனம் வெறுத்து போய் தானுபே ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.


இது தான் அந்த சிங்கம் 



புடாபெஸ்ட்ல் எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக.


Chain Bridge 




                                                       புடாபெஸ்ட் கோட்டை 





சர்ச்சும், பாராளுமன்றமும் ஒரே உயரம் வருமாறு கட்டி இருக்கிறார்கள்.

கடவுளும், அரசாங்கமும் ஒன்று என்ற நம்பிக்கையை காட்டவாம்.

என்னோட வலது பின்பக்கம் இருக்கிறது பாராளுமன்றம், இடது பின்பக்கம் சர்ச்.



                                                     பாராளுமன்றம்



Limousine Car, ஒரே இடத்துல 2 கார் நிக்கிறத பார்த்து ரெம்ப பீலிங்க்ஸ் போங்க   


இரவு 11 மணிக்கு ஹோட்டலுக்கு வந்து அதிகாலை 5 மணிக்கு (அடுத்த நாளும் தூக்கம் போச்சு) எழுந்திருச்சி கிளம்பி காலை 7:10 மணிக்கு வியன்னா செல்லும் ரயிலில் கிளம்பினோம். 10:10 வியன்னாவில் இறங்கினோம்.


இறங்கின பத்தாவது நிமிஷம் ஒரு அதிர்ச்சியான விசயத்த கேள்வி பட்டோம்.

அது என்னவா இருக்கும் ?????????????


அடுத்த பதிவுல பாருங்க......... 

                                                                                             
                                                                                              நன்றிகளுடன் 
                                                 
                                                                                    மகேஷ் பிரபு விஜயராஜ்              
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக