புதன், 11 பிப்ரவரி, 2015

பயணங்கள் பலவிதம் - 3

இதுக்கு முன்னாடி

இதுக்கு முன்னாடி 

அந்த அதிர்ச்சியான சம்பவம் என்னா.......

நம்மள வளரும் நாடுன்னு சொல்றாங்க, விமானம் மற்றும் ரயில் டிக்கட்ட மொபைல்ல காட்டுனாலே போதும், ஐரோப்பா நாடுகளை வளர்ந்த நாடுகள்ன்னு சொல்றாங்க அங்க டிக்கெட் ஆன்லைன்ல எடுத்தா, பயணத்துக்கு முன்னாடி ரயில்வே ஸ்டேஷன்ல போய் பிரிண்ட் அவுட் எடுத்து வச்சிருக்கணுமாம்.

சாயங்காலம் தானே பயணம், பயணத்துக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கே, ஸ்டேஷனுக்கு போய் அழகா போய் பிரிண்ட் அவுட் எடுத்துக்கலாமே இப்போ என்ன பிரச்சனை, அது தானே உங்க கேள்வி.

நாங்க டிக்கட் எடுத்தது இத்தாலியன் ரயில் வலைத்தளத்தில், அந்த டிக்கட்டை இத்தாலி நாட்டுக்குள் வைத்து தான் பிரிண்ட் எடுக்க முடியுமாம். நாங்கள் இருப்பதோ வியன்னாவில், அந்த நாட்டு வலைத்தளத்தில் எடுத்த டிக்கட்டை மட்டும்தான் பிரிண்ட் எடுக்க முடியுமாம். ஒரே ரயில் இரண்டு நாடுகளுக்குள் ஓடுகிறது, ஆனால் ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிந்துணர்வு இல்லை.

நாங்கள் ஆன்லைனில் டிக்கட் எடுத்த போது வந்த மின்னஞ்சலை வைத்து தகவல் மையத்தில் விசாரித்து பார்த்தோம். இந்த மின்னஞ்சலை குப்பையில் போடுங்கள், இது செல்லாது, இதை வைத்து பயணித்தால் டிக்கட் தொகையுடன், மூன்று மடங்கு அபராதம் கட்ட வேண்டி இருக்கும் என்றார்கள்.

டிக்கட்டின் அப்போதைய விலை 100 இரோ (8000 ரூபாய்), அபராதத்துடன் 32000 ரூபாய் வரும். எங்களுக்கு ஒரே டரியலாகி போய் விட்டது. ரெம்ப நேரம் ரயில்வே நிலையத்திலிருந்து உக்காந்து உக்காந்து யோசித்து பார்த்தோம். நானும் இன்னொருவரும், நாங்கள் ஏற்கனவே எடுத்து வைத்த டிக்கடிலே பயணம் செய்து பார்போம். டிக்கட் பரிசோதகரை கிழக்கே பார்த்து நிற்க வைத்து காலில் விழுந்தாவது சமாளிப்போம் என தோன்றியது. மீதி இருவர் ரிஸ்க் எடுக்க வேண்டாம் 8000 ரூபாயை பார்த்தால், 32000 ரூபாய் போய்விடும் என்றார்கள்.

ரெம்ப நேரம் பேசி பேசியும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.
இறுதியில், ரயில் கிளம்பும் முன் டிக்கட் பரிசோதகரிடம் கேட்டு பார்க்கலாம். அவர் முடியாது என்றால், 100 ஈரோவிற்கு டிக்கட் எடுத்துக்கொள்வோம் என முடிவு செய்தோம்..........

பிறகு வியன்னா நகரை சுத்தி பார்த்தோம்.

அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு........


வியன்னா நகரில் ஒரு சர்ச் 


ஆஸ்திரியா பாராளுமன்றம் 

\

அரண்மனை 


கயிறு வைத்து ஒரு நீர்குமிழி உருவாக்கிக்கொண்டிருந்தார் 


மாற்றொரு அரண்மனை 




அன்று மாலை என்ன நடந்தது, அடுத்த பதிவில் பாருங்கள்.....


டிஸ்கி : கொஞ்சம் நீளமாகிவிட்டது அடுத்த பதிவோடு முடித்து கொள்கிறேன்.......     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக