வியாழன், 22 மே, 2014

நரேந்திர மோடி

நரேந்திர மோடிக்கும் நிதிஷ் குமார்க்கும் தொலைபேசியில் ஒரு கற்பனை உரையாடல்.


 


நமோ : நமஸ்கார் நிதிஷ் ஜி, எத்தனை சீட் ஜெய்ச்சீங்க ?


நிகு : இரண்டு   


நமோ : நானும் இரண்டு சீட் தான் ஜெயிச்சேன், வாரணாசி மற்றும் வதோரா. நிகு : இப்போவே கண்ண கட்டுதே..


நமோ : இப்போ என்ன பண்ண போறீங்க.


நிகு : என்னோட மாநிலத்திலிருந்து முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா பண்ணிட்டேன்.


நமோ : நான் கூட தான் என்னோட மாநிலத்திலிருந்து முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா பண்ணிட்டேன்.


நிகு : ????????
     

குறிப்பு : நண்பர் ஒருவர் வாட்ஸ் அப்பில் அனுப்பிய குறுஞ்செய்தி. உங்களுடன் பகிர ஆசைப்பட்டேன்....               

புதன், 7 மே, 2014

வாழைப்பழம்


தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?

     


படம் - இணையத்திலிருந்து 


எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். 


மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம். 


அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.


மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது. 


அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.


நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்.


குறிப்பு : நண்பர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சல் இது, உங்களுடன் பகிர ஆசைப்பட்டேன்....  




வெள்ளி, 2 மே, 2014

பார்த்ததில் பிடித்தது - 1

கொஞ்ச நாள் மறைந்திருந்த மின்வெட்டு மீண்டும் தலைதூக்கியதால், மின்சாரம் வந்ததும் தமிழனின் ரியாக்சன்.




கூட்டதோடு கும்மி அடித்துவிட்டு மாட்டிகொண்டதும்.


 



பத்து மணிக்கு தத்கல் டிக்கட் எடுப்பவனின் நிலை இதுதான்.

 




அண்டை மாநிலம் வாழ்க




வியாழன், 1 மே, 2014

உழைப்பாளர் தினம்

 "ஒருவன் ஒருவன் முதலாளி, உலகில் மற்றவர் தொழிலாளி"

 



இணையத்திலிருந்து  

என தலைவரின் வரிகளுக்கு இணங்க, உலகில் உள்ள தொழிலாளிகள் அனைவரும், அனைத்து சிறப்புகளும் பெற்று நலமுடன் வாழ நம் பெரிய முதலாளியை வேண்டி கொள்வோம்.....


              


                                  இணையத்திலிருந்து 


இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்....