நானும் எனது மூன்று வயது மகன் அஸ்வத்தும் விளையாட்டாக படுக்கையறையில் பேசிக்கொண்டு (சண்டை) போட்டு கொண்டு இருந்தோம்.
விளையாட்டாக அவனிடம், "அப்பா கோபமாக இருக்கிறேன்" என்று சொல்லி திரும்பி படுத்துக்கொண்டேன்.
எனது மகன் "அப்பா !!! அப்பா !!!" என்றான்.
சமாதானபடுத்ததான் அழைக்கிறான் என நினைத்து கெத்தாக "என்னடா" என்றேன்.
அதற்கு அவன், "அப்பா நீ கோபமாக இல்லை, நான்தான் கோபமாக இருக்கிறேன்", என்றான்.
நான் என்ன சொல்ல, ஏது சொல்ல,
இவிங்கள்ட்ட வாய குடுத்து மீள முடியலையே .............