வெள்ளி, 31 ஜனவரி, 2014

வடக்கு நோக்கி ஒரு பயணம்

ஜன 26. குடியரசு தினவிழா அணிவகுப்பிற்க்கு செல்ல டிக்கெட் வாங்க முயற்சி பண்ணினோம். டிக்கெட் கிடைக்கவில்லை.

டெல்லி வந்த இந்த ஒரு வருடத்தில் நிறைய பயணம் செய்திருந்தாலும், மலைபிரதேசங்களுக்கு செல்லவில்லை என்பது ஒரு பெரும் குறையாகவே இருந்தது. சரி கிளம்புடா கைபுள்ளைனு சொல்லிட்டு நைனிடால் கிளம்பியாச்சு.

உத்ரஹாண்ட் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒன்று தான் நைனிடால் மாவட்டம்,  மாவட்ட தலைநகரும் நைனிடால் நகர் தான்.

இதுவரைக்கும் டெல்லில இருந்து எங்கேயும் பஸ்ல போனதில்லை, இந்த பக்கம் பஸ் பயணத்தை பத்தி நிறைய கேள்வி பட்டிருக்கேன். பான்பராக் போட்டு சீட் பக்கத்திலே எச்சி துப்புவாங்கன்னும், நம்ம முன்பதிவு செஞ்ச சீட்ல இருந்து எந்திரிக்க மாட்டாங்கன்னும் சொல்லி இருக்காங்க. ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு தயாராகித்தான் போனேன். எந்த சாமி செஞ்ச புண்ணியமோ அப்படி எதுவும் இல்லை.

 நானும், நண்பர் அருணும், டெல்லி - ஹல்த்வானி பஸ்ல இரவு 9 மணிக்கு கிளம்புனோம். அதிகாலை 3 மணிக்கு ருத்ரபூர் எனும் இடத்தில் இறங்கினோம். ஒரே பனிமூட்டமா இருந்துச்சி, என்னத்த கண்ணையா சொன்ன மாதிரி இல்லைங்க, பயங்கர குளிர். பனியன், அதுக்கு மேல ஒரு டி-ஷர்ட், அதுக்கு மேல ஒரு சட்டை, அதுக்கு மேல ஒரு ஷ்வேட்டர், அதுக்கு மேல ஒரு ஜெர்கின், அதுக்கு மேல ஒரு ஷால், பின்னாடி ஒரு ஷோல்டர் பேக் மாடியும் குளிர் தாங்க முடியல. (தூத்துக்குடில வளர்ந்த பையனுக்கு குளிர்னா என்னங்க தெரியும்)      

ருத்ரபூர்  ஹல்த்வானிக்கு, 30 கி.மீ. முன்னாடி இருக்குது. இந்த ஊர் ஒரு விவசாய கிராமம், எங்க பார்த்தாலும் பச்ச பசேல்னு இருந்தது.
இப்போ 600க்கு மேல தொழிற்சாலைகள் வந்துருச்சி. கூடிய ஊரை சீக்கிரம் மொட்டை அடிச்சிருவாங்க.

சாலையின் ஒரு புறம் வயல்வெளி, மறுபுறம் அடுக்குமாடி குடியிருப்புக்கள்.






இந்த ஊர்ல விக்னேஷ்னு ஒரு நண்பன் இருந்தான். அவங்க வீட்ல போய் கொஞ்சமா தூக்கத்த போட்டுட்டு, ரெடி ஆகி 11 மணிக்கு அங்க இருந்து கிளம்பினோம்.

பங்கு ஆட்டோல ஹல்த்வானி போனோம். அப்புறம் ஹல்த்வானில இருந்து நைனிடாலுக்கு அரசு பேருந்தில் போனோம். போற வழில ஒரு எடத்துல, டிரைவர் பஸ்ஸ ஓசி சாப்பாட்டுக்காக (அவருக்குங்க) நிறுத்தினார். சுட சுட பக்கோடா இருந்தது, ஆஹா அருமை, அதைவிட மஞ்ச கலர்ல புளிப்பா, உரைப்பா ஒரு சட்னி வச்சிருந்தாங்க, அது இன்னும் அருமை. சாப்பிட்டுவிட்டு பஸ் ஏறினோம். 2 மணிக்கு நைனிடால் கொண்டு போய் விட்டாங்க.

நைனி தேவி கோவில் இங்கு உள்ளது. இது 64 சக்தி  பீடத்தில ஒன்று. அம்மனின் உடம்பில் இருந்து கண்கள் இங்கே விழுந்ததாக புராணம் சொல்கிறது.

நைனி என்றால் கண்கள், டால் என்றால் குளம். நைனிடால் என்றால் கண்களை போன்ற குளம்ன்னு அர்த்தம். உயரமான இடத்தில இருந்து பார்த்தா அந்த மாதிரி தான் தெரியுது. இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 2000 மீ. உயரத்தில் உள்ளது.









இங்க இருந்து 50 கி.மீ. தூரத்தில் முக்திஷ்வரர் எனும் இடத்துக்கு போனோம்.
போற வழில, சில இடத்தில ஐஸ் உருவாகி இருந்தது. பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.













ஒருத்தர் வீட்டின் பின்புறம் பனி தூவல்..



மறுநாள் காலையில் நைனிடால் சுற்றி உள்ள இடங்களை பார்த்தோம்.
தூரத்தில் இமயமலையின் பனி படர்ந்த சிகரங்களை பார்த்த பொழுது உள்ளுக்குள் ஒரு சிலிரிப்பு, அப்படியே மெய் மறந்துட்டோம்.



மதியம் பீம்டால் எனும் இடத்திற்கு அருகில் பாராகிளைடிங்கில் சென்றோம். இது 1000 அடி உயரத்தில் பாராசூட் கட்டி, செங்குத்தான மலையிலிருந்து கிழே ஓட வேண்டும், காற்றின் விசையினால் நாம் பறந்து, தவழ்ந்து கிழே வருவோம். நம்மோடு அவர்கள் ஆள் ஒருவர் வருவார். அவர் திசை மற்றும் தரை இறங்குதலை பார்த்துக்கொள்வார்.




ஆரம்பத்துல கொஞ்சம் டரியலாக இருந்தது, அப்புறம் செம ஜாலியா இருந்தது. இதுல என்ன வருத்தம்னா ஜாலியா பீல் பண்றப்போவே கிழே இறங்கிருவோம். மொத்தமே 2 நிமிஷம் தான். அப்புறம் பீம்டால்ல ஒரு குளம் பார்த்துட்டு, ஹல்த்வானி வந்தோம்.

மறுபடியும் பங்கு ஆட்டோ ஹல்த்வானி -  ருத்ரபூர், Tata Ace வண்டில, டிரைவர சேர்த்து முன்னாடி 4 பேர், பின்னாடி 4+4, அதுக்கு பின்னாடி 4 பேர். மொத்தம் 16 பேர் வந்தோம். பூட் போர்டு அடிச்ச ஒரு சராசரி தமிழனுக்கு, இந்த ஆட்டோல இடம் பிடிக்கிறது ரெம்ப சவாலான விஷயமா இருந்தது. நண்பன் விக்னேஷ் தான் இடம் பிடிச்சி குடுத்தான்.          

ருத்ரபூர் வந்து இரவு 10 மணிக்கு ரயில் பிடித்து டெல்லி வந்து சேர்ந்தோம்....



  

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

அக்கரைச் சீமை அழகினிலே - 2

ஆபீஸ் உள்ளே போய், ரிசப்சன்ல இருந்த அக்கா ?, கிட்ட போய் என்னோட பாஸ்போர்ட் மற்றும் ஐ.டி. கார்ட கொடுத்துட்டு, என்னோட காலிக் (Counter Part, Italy office Employee) பேர சொல்லி அவர பாக்கணும்னு சொன்னேன். அவங்க கம்ப்யூட்டர்ல தட்டிட்டு, அப்படின்னு யாரும் இல்லைன்னு சொன்னாங்க.

நான் கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன். ஏன்னா அவர்தான் எனக்கு இன்னும் ஒரு மாசத்துக்கு பாஸ். எங்க உக்காரணும்ங்கிறதுல இருந்து ஆரம்பிச்சி, என்ன வேலைங்கிற வரைக்கும் அவர்தான் எனக்கு சொல்லணும். அவர கண்டுபிடிகலைன்னா ராடுதான் எனக்கு. நல்லா தேடி பாருங்கன்னு சொன்னேன். அவங்க நல்ல தேடி பார்த்துட்டேன் இல்லைனு சொன்னாங்க.

அந்த நேரத்தில நெறைய பேர் ரிசப்சனுக்கு வந்தாங்க. நம்ம அக்கா, நீ கொஞ்சம் வெயிட் பண்ணு ராசானு சொல்லி அவங்க பக்கம் திரும்பிட்டாங்க.

நான் பேன்னு ஓரமா நின்னுகிட்டு இருந்தேன். ஒரு அரை மணி நேரம் கழிச்சி, இங்க வா கண்ணு உங்க ஆள தேடுவோம்னு சொன்னாங்க. என்கிட்டே அவர் பேர  வேற வேற மாடுலேஷன்ல சொல்ல சொன்னாங்க. 

ரெம்ப போராட்டத்துக்கு அப்புறமா கடைசியா அவர கண்டுபிடிச்சிட்டாங்க. அவருக்கு இண்டர்காம்ல போன் பண்ணி உங்க ஆள் ஒருத்தன் ரிசப்சன்ல இருக்கான், தயவு செய்து வந்து கூட்டிட்டு போங்கனு சொன்னாங்க. ஏன்ன நான் குடுத்த கொடச்சல் அப்படி. என்கிட்டே உங்க ஆள் வர்றார் வெயிட் பண்ணுனு சொன்னாங்க. 

இந்த குழப்பத்திற்கு காரணம் என்னன்னா அவர் பேர நான் sparsiனு சொன்னேன், sbarsiனு சொல்லனுமாம். என்னடா இது செந்தமிழுக்கு, தமிழனுக்கும் வந்த சோதனைனு நினைச்சிகிட்டேன்...

கொஞ்ச நேரம் கழிச்சி ரிசப்சனுக்கு ஒரு போன் எங்க ஆள்தான். அவர் ரிசப்சனுக்கு வந்து பார்த்தாரம் என்னைய காணமாம்..

விசாரிச்சப்ப தான் தெரிஞ்சது, நான் நின்னுகிட்டு இருந்தது ஒரு ஆபீஸ், நான் போக வேண்டியது இன்னொரு ஆபீஸ்னு. அந்த ஊர்லே எங்களுக்கு மூணு எடத்தில ஆபீஸ் இருக்குதாம். 

ஆரம்பமே இப்படி சுத்தல் விடுதே, இன்னும் என்னென்ன நடக்க போகுதோன்னு ஒரே திகில்ல நின்னேன். 

அந்த அக்காகிட்ட அட்ரச தெளிவா? எழுதி வாங்கிட்டு, டாக்ஸி பிடிச்சி அந்த ஆபீஸ் போனேன். 

எங்க தலைய பார்த்து அட்டெண்ஸ் போட்டுட்டு போய் எடத்தில உக்காந்தேன். 
வேலைய ஆரம்பிச்சாச்சு.....

மத்தியானம் சாப்பிட கூப்பிட்டு போனாங்க. அங்க பபே சிஸ்டம். உனக்கு அது வேண்டாம், இத சாப்பிடாதனு சொன்னாங்க,

ஏன் பாஸ்னு கேட்டேன், இது பீப், அது போர்க் அப்படினாங்க. நீங்க இண்டியன்ஸ் சாப்பிட மாட்டீங்க, அதான் சொன்னேன்னாரு. 

நான் பறக்கிரதுல விமானம், மிதக்குறதுல கப்பல், ரோட்ல ஓடுறதுல பஸ் தவிர எல்லாத்தியும் சாப்பிடுவேன் நம்ம சினிமா டயலாக் விட்டேன். அதுக்கு சேர்த்து ஒரு நாள் அனுபவிச்சேன். ஓடோட நத்தை, குட்டி அக்டோபஸ் எல்லாம் போட்டாங்க. அண்ணைக்கு எனக்கு கண்ணையும், வயித்தையும் சேர்த்தே காட்டுச்சி.... 

என்னோட மத்தியான சாப்பாடு இது தான்...


என்னோட இன்னொரு நண்பர் பிரவீன் அங்க இருந்தார். சாயங்காலம் கிளம்பி, என்னோட லக்கேஜ் எடுத்திக்கிட்டு, The One ஹோட்டலுக்கு போனோம், அங்கே தான் ஒரு மாசம் ஜாகை, அந்த ஹோட்டல்ல அட்டாச்டு கிச்சன் இருந்தது. அப்புறம் என்ன நானும் பிரவீனும் சேர்ந்து ஒரே சமையல் மழை தான்....   





நான் தங்கி இருந்த ஹோட்டல் இது தான்.

                                


இந்த போட்டோவ என்னோட சொந்தங்களுக்கு அனுப்பினேன். என்னோட மாமா பையன் ராஜேஷ், என்ன மாமா ஊர் இது, ரோட்ல ஒரு எருமை மாடு கூட இல்லை. ஹோட்டல் நடு ரோட்ல இருக்கு, அந்த ஊர் அரசியல்வாதி கட்டினதான்ணு கேட்டு கலாய்ச்சிகிட்டுஇருந்தான்.


அனுபவங்கள் தொடரும்..........

                                                                             - மகேஷ் பிரபு விஜயராஜ்               

வெள்ளி, 3 ஜனவரி, 2014

மே அர்விந்த் கேஜ்ரிவால் ஈஸ்வர் ஷே சபத்லக்தாகு

புது டெல்லி, டிச. 26, 12:00:00 :

அர்விந்த் கேஜ்ரிவால், ராம் லீலா மைதானத்தில் டெல்லியின் 7 வது முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். (1956லிருந்து - 1993 வரை, ஜனாதிபதி ஆட்சி).

நானும், எனது நண்பன் நிவாஸ்ம் பதவியேற்ப்பு விழாவிற்கு போனோம். கேஜ்ரிவால் மாதிரியே நாங்களும் மெட்ரோல தான் போனோம் (வேற வழி இல்லை, அதனாலதான்).

புது டெல்லி மெட்ரோ ஸ்டேஷன்ல பயங்கர கூட்டம் (மன்னன் படத் தில சின்ன தம்பி படத்துக்கு, ரஜினி, கவுண்டமணி டிக்கெட் வாங்கற சீன் ரேஞ்சுக்கு இருந்தது). எல்லாம் பதவியேற்ப்பு விழாவிற்கு வந்த கூட்டம் தான்.






மைதானத்துக்கு போனா, ஒரே ஆச்சர்யம்....

ஒரு கொடி  இல்லை, தோரணம் இல்லை, வண்ண வண்ண விளக்குகள் இல்லை. எங்கே பார்த்தாலும் மனிதத்தலைகள். பிரியாணி இல்லை, சரக்கு இல்லை, அட 100 ரூபாய் குடுக்க கூட ஆள் இல்லை.

                               

                                 

                                  

எல்லா கூட்டமும் கை காசு போட்டு வந்தது, 12 மணிக்கு பதவி பிரமாணம்னு சொன்னாங்க, 11.45 ஆகிடுச்சி இன்னமும் யாரையும் காணோமேனு பார்த்தா, சரியாக 11:50க்கு எல்லாரும் வந்தாங்க, அர்விந்த் கேஜ்ரிவால், அவர் கூட 6 பேர் அமைச்சர்கள், துணை நிலை ஆளுநர், அப்புறம் ஒரு அறிவிப்பாளர், இவ்வளவுதான் மேடை ஏறினவங்க..

10 நிமிசத்துல பதவியேற்பு  நிகழ்ச்சி நடந்து முடிந்தது. அப்புறம் கேஜ்ரிவால் கொஞ்ச நேரம் பேசினார்.

1. இந்த போராட்டம், டெல்லி மக்களுக்கு அதிகாரம் கொடுப்பதற்கே.

2. இன்று ஆம் ஆத்மி சட்ட மன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி எடுக்கவில்லை, இது அனைத்து டெல்லி குடிமகனும் உறுதிமொழி எடுத்தாகும்.

3. இந்த முறை, டெல்லி மக்கள் நேர்மையாலும் தேர்தலில் வெற்றி பெற முடியும் என் நிருபித்து உள்ளார்கள்.

4. இந்த போராட்டத்தின் வெற்றிக்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.

5. அனைத்து பிரச்சனைகளுக்கும், எங்களிடம் மந்திரம் இல்லை தீர்வு சொல்வதற்க்கு, ஆனால் எங்களிடம், நாம் அனைவரும் சேர்ந்து அதை தீர்க்க முடியும் என்ற ஆழமான நம்பிக்கை உள்ளது.

6. ஒரு சில மக்கள் மட்டுமே எதையும் சாதித்து விட முடியாது. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் போராடவேண்டும்.

7. எனது அமைச்சர்களையும் உழியர்களையும், அதிகாரபெருமை கொள்ள வேண்டாம் என அறிவுருத்துள்ளேன்.

8. நாங்கள் அராஜக அரசியலை ஒழிக்க, கட்சி ஆரம்பித்துள்ளோம். நாங்களும் அதே போல் ஆகிவிடமாட்டோம் என நம்புகிறேன்.

9. இந்த போராட்டம் நீண்ட நாள் தொடரும், மக்களின் ஆதரவு என்றைக்கும் வேண்டும்.

10. நங்கள் நம்பிக்கை வாக்கஎடுப்பை பற்றி கவலைபடவில்லை.

11. அரசு அலுவலகங்களில், யாராவது லஞ்சம் கேட்டால், எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் கையும் களவுமாய் பிடிக்கிறோம்.     

 அர்விந்த் கேஜ்ரிவால், காலம், காலமாய் எல்லாரயும் நம்பி ஏமாந்துகிட்டு இருக்கோம், உங்களையும், இன்னொருத்தரையும் தான் இப்போ நம்புறோம், எதாவது பண்ணுங்க ப்ளீஸ்....

                                                                               - மகேஷ் பிரபு விஜயராஜ்