புதன், 12 நவம்பர், 2014

பயணங்கள் பலவிதம் - 1

 நவம்பர் மாதம் 8, 9 தேதிகளில் இத்தாலியிலிருந்து புடாபெஸ்ட் மற்றும் வியன்னா ஒரு பயணம் மேற்கொண்டோம் (மொத்தம் 4 அப்பாவிகள்), அதை பற்றிய ஒரு பயண பதிவு இது.

'ஆவ்' ன்னு கொட்டாவி விட்டுகிட்டே படிக்க ஆரம்பிங்க பாப்போம்......

சனிக்கிழமை காலை 8:45 மணிக்கு ரோம் சியாம்பினோ (Ciampino) விமான நிலையத்திலிருந்து ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் சென்று (2 மணி நேரம் பயணம், டிக்கட் விலை 56 Euro), அன்று முழுவதும் அங்கு சுற்றி பார்த்து விட்டு, மறுநாள் காலை 7:10 க்கு ரயில் (3 மணி நேரம் பயணம், டிக்கட் விலை 13 Euro), மூலம் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவை வேடிக்கை பார்த்துவிட்டு இரவு 7:30 மணிக்கு ரோமிற்கு ரயில் மூலம் அடுத்த நாள் காலை 9:22 மணிக்கு திரும்பி வருவதாக திட்டம் (14 மணி நேரம் பயணம், டிக்கட் விலை 39 Euro).    

ஏன் டிக்கட் விலையெல்லாம் சொல்றன்னு கேக்குறீங்கள, அதுக்கு பதில் பின்னாடி இருக்குங்க (சஸ்பென்ஸ் வச்சுடம்ல)......

நவம்பர் மாதம் 8ந் தேதி :

காலையில் 4 மணிக்கே அலரம் வச்சு கஷ்டப்பட்டு எந்திரிச்சி, கிளம்பி 7 மணிக்கு சியாம்பினோ (Ciampino) விமான நிலையம் போனோம். செக்கிங்  எல்லாம் முடிச்சிட்டு வரிசைல நின்னோம்......நின்னுகிட்டே இருந்தோம். போர்டிங் கேட் தொறக்கிற வழிய காணோம்.

அந்த விமான நிலையத்தில இருந்த கூட்டத்த, அங்க இருந்த மக்களையும் பார்த்த நம்ம கோயம்பேடு பஸ் ஸ்டாண்டே பரவாயில்லைன்னு தோணும்.

நீங்களே பாருங்க......








 எங்களுக்கு முன்னாடி ஏகப்பட்ட பேர் நின்னுகிட்டு இருந்தாங்க  (நாம ரேஷன் கடைல நிக்கிறதா விட, ரெம்ப பொறுப்பா நின்னாங்க). வரிசைல வரிசைல நின்னு கால் வலிக்க ஆரம்பிச்சிருச்சி, போங்கடா நீங்களும் உங்க வரிசையும் அப்படின்னு சொல்லிட்டு உக்கார இடம் தேடி அலைஞ்சோம். எங்கேயும் இடம் கிடைக்கல, பந்தில உக்கார மாதிரி தரைல நல்ல ஜம்ன்னு உக்காந்துட்டோம்.  

ஒருவழியா 9 மணிக்கு ஒரு அறிவிப்பு, புடாபெஸ்ட் போற விமானம் இன்னொரு விமான நிலையமான ஃபியுமிசினோ (Fumicino) ல இருந்து கிளம்பும், எல்லாம் போர்டிங் கேட் போங்கனாங்க.

 அங்க போனா ஒரு பஸ்ல ஏத்திவிட்டாங்க, அந்த பஸ் ஒரு U-டர்ன், அரைவல் கேட்ல இறக்கிவிட்டுச்சி. எல்லாரும் விமான நிலையத்த விட்டு வெளியே போங்க. இன்னொரு பஸ் மூலமா ஃபியுமிசினோ போலாம்ன்னு சொன்னாங்க. அடிச்சி பிடிச்சி அந்த பஸ்ல ஏறிட்டோம், அது என்ன மாயமோ என்னமோ, எனக்கு உக்கார எடம் இல்லை. டிரைவர், வா பங்காளி என் பக்கத்துல கிளினர் சீட்ல உக்காருன்னு சொன்னாரு.

ஃபியுமிசினோ விமான நிலையத்தில செக்கிங் முடிச்சிட்டு உள்ளே போய் உக்கார்ந்தோம். அப்போ டிங்னு ஒரு சத்தம், என்னான்னு பார்த்தா, என்னோட மொபைலுக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது.

இந்த மாதிரி, இந்த மாதிரி, உங்க விமானம் தாமதமாகி போச்சு, மன்னிச்சிருங்க சாமி, விமானம் தோராயமா 12:30 கிளம்பும்ன்னு வந்திருந்தது.
அப்போ புடாபெஸ்ட் பீ.....பீ...... தானா, ஏர்போர்ட் தான் சுத்தி சுத்தி பாக்கணும் போல நினைச்சிகிட்டு போர்டிங் கேட் முன்னாடி வெறிக்க வெறிக்க பார்த்துட்டு உக்காந்து இருந்தோம்.

நம்ம ஊர்ல விமானம் தாமதமானால், காஞ்சிபோன சமோசா, சான்விட்ச், காபி, சூஸ் எல்லாம் குடுப்பாங்களே, இவங்க அதே மாதிரி குடுப்பாங்களா, போய் ஏர்லைன்ஸ் ஆளுங்கள்ட்ட கேட்டோம். அவங்க நம்மள விட விவரம், இந்தா பஸ் வந்துகிட்டே இருக்கு, நீங்க இப்போ விமானம் எறிரலாம்னு சொன்னாங்க.    

எங்களுக்கு 2 பஸ்ல மக்கள் ஏறி விமானத்துக்கு போய்டாங்க, நாங்கதான் கடைசி. அங்க போய் பார்த்த எல்லாம் விமான சுத்தி நின்னுகிட்டு இருக்கானுக. ஒரு கோஷ்டி விமானத்தோட விங்க்ஸ்க்கு கிழே குடும்பம் நடத்திகிட்டு இருக்குது.




என்ன விசயம்னா, 4 மணி நேரத்துக்கு மேல தாமதமான, பயணிகளுக்கு காச திருப்பிக்கொடுக்கனுமாம், அதனால எல்லாரையும் 3.45 மணி நேர தாமதத்திலே, விமானம் பக்கத்தில நிக்க வச்சிட்டாங்க.

அப்புறம் ஒரு வழியா உள்ள போய் ஒரு மணிக்கு கிளம்பி மத்தியானம், 3.15 கொண்டு போய் புடாபெஸ்ட் விமான நிலையத்தில இறக்கி விட்டாங்க. சத்தியமா சொல்றேங்க நம்ம மதுரை ஏர்போர்ட் சொர்க்கம், விமானத்தில இருந்து இறங்கி டெர்மினலுக்கு போற பாதைய நீங்களே பாருங்க.
      

அப்புறம் டெர்மினல் போய் சிட்டிக்குள்ளே போக 24 மணி நேரம் பாஸ் வாங்கினோம். ஒருத்தருக்கு பாஸ் இந்திய மதிப்பில் 420 ரூபாய், 5 பேர் கொண்ட குழுவுக்கு 1300 ரூபாய். கணக்குல நம்மள விட ரெம்ப விவரமா இருப்பாங்க போல, எங்க நாலு பேருக்கு 5 பேர் குழு பாஸ் வாங்கிட்டு, பஸ், அப்புறம் மெட்ரோன்னு மாறி சிட்டிக்குள்ள போனோம்.

நாங்க ஹோட்டல் போனப்ப மணி 5. 

அப்படியே ஊர சுத்தி பார்த்தோம், சும்மா சொல்லகூடாது, இரவு விளக்கு வெளிச்சதில ஊர் ரெம்பவே அழகா இருந்தது........


அந்த புகைப்பட தொகுப்ப அடுத்த பதிவுல பாருங்க......... 

                                                                                             
                                                                                                    நன்றிகளுடன் 
                                                 
                                                                                  மகேஷ் பிரபு விஜயராஜ்              

                                                                                                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக