சனி, 8 நவம்பர், 2014

தலையின் மேல் விதி - 4

முன்னாடி என்ன நடந்திருக்கும், இத அழுத்தின தெரியும்


கந்தஹார் விமான நிலையம்

 

கந்தஹார் தாலிபான்கள் இந்த விவகாரத்தை தாங்கள் கையாண்டால், உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என கருதி, IC-814 விமானத்தை சுற்றி பாதுகாவலர்களை நிறுத்தி வைத்திருந்தார்கள். நாங்கள் மத்தியஸ்தம் செய்கிறோம், கடத்தல்காரர்கள் பயணிகளை தாக்க கூடாது என்பதற்காவே  பாதுகாவலர்களை நிறுத்தி வைத்திருக்கிறோம் என்றார்கள்.


 இந்தியா அவர்களை நம்பவில்லை, இந்திய கமண்டோக்கள் விமானத்தை நெருங்க கூடாது என்பதற்காவே பாதுகாவலர்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என நினைத்தனர், அதனால் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை பேச்சுவார்த்தை நடத்துமாறு பணித்தனர். 

 

அன்று மதியம் பயணிகளின் உறவினர்கள், பிரதமர் வீட்டின் முன்பு கூடினார்கள். என்ன விலைகொடுத்தேனும் பயணிகளை மீட்க்கவேண்டும் என கோஷமிட்டார்கள். டிசம்பர் 30 வரை பிரதமர் வீட்டின் முன்பு இந்த காட்சி அரங்கேறியது.

 

கடத்தல்காரர்கள், இந்தியாவின் வெவ்வேறு சிறையில் உள்ள 36 தீவிரவாதிகளை விடுவிக்கவிடில், விமானத்தை வெடிக்க செய்து விடுவதாக மிரட்டினார்கள்.

 

வெளியுறவு துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், கடத்தப்பட்ட பயணிகளின் உறவினர்களிடம் அரசு பயணிகளை மீட்க்க எடுக்கும் முயற்சிகளை பற்றி விளக்கிக்கொண்டிருந்தார். உறவினர்கள் எதையும் கேட்கும் நிலையில் இல்லை.

 

"எங்களுக்கு எங்கள் உறவினர்கள் வேண்டும், நீங்கள் என்ன கொடுப்பீர்கள்  என்பதை பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. நீங்கள் காஷ்மீர் கொடுக்கும் நிலைக்கு வந்தால் கூட நாங்கள் கவலை பட மாட்டோம், எங்களுக்கு எங்கள் உறவினர்கள் வேண்டும்" என்றார்கள்.    

 

ஜஸ்வந்த் சிங், "நாட்டின் பாதுகாப்பையும் சிந்திக்க வேண்டும், அரசாங்கத்தால் என்ன முடியுமோ அதை கண்டிப்பாக செய்யும்" என்றார்.

 

பயணிகளின் உறவினர்கள் கோபமடைந்து கோஷமிட்டார்கள்.

 

அதன் பிறகு ஒரு நாள் மாலை, ஜஸ்வந்த் சிங் பத்திரிக்கையாளர்களுடன் சந்திப்பு நடத்தினார், அங்கும் வந்து பயணிகளின் உறவினர்கள் கூச்சலிட்டார்கள், அதில் ஒருவர், இதற்க்கு முன்பு இந்திய அரசாங்கம், உள்துறை அமைச்சர் முப்தி முஹம்மது சயீத் மகள் கடத்தப்பட்ட போது தீவிரவாதிகளை விடுவித்தது போல, இப்பொழுது விடுவியுங்கள், நீங்கள் எதை கொடுத்தாலும் கவலை  இல்லை.காஷ்மீரை கூட கொடுங்கள், எங்களுக்கு எங்கள் உறவினர்கள் வேண்டும்" என்றார்.        

 

இன்னொரு நாள் மாலை, கார்கில் போரில் இறந்த விமானி அஜய் அகுஜாவின் மனைவி, பிரதமர் அலுவலகம் வந்தார். அவர் பயணிகளின் உறவினர்களை சந்தித்தார்.

 

"கடத்தல்காரர்களின் மிரட்டலுக்கு நாம் அடிபணிய கூடாது, இது தொடர் கதையாகிவிடும். நம் நாட்டிற்க்கு அவமானம், அந்த தீவிரவாதிகள் வெளியே வந்தால் நாட்டிற்கு ஆபத்து அதிகமாகி விடும், என்னையே எடுத்துகொள்ளுங்கள், என் கணவர் நாட்டுக்கு இறந்தார், இதற்க்கு நான் பெருமைபடுகிறேன்" என்றார்.

 

இதை கேட்ட பயணிகளின் உறவினர்களில் ஒருவர், "இவள் விதவை ஆகிவிட்டாள் என்பதற்காக, அடுத்தவர்களையும் விதவை ஆகா சொல்கிறாள், எங்களிடம் வந்து பேச யாரிவள்" என்றார்.

 

இதே போல் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் தாய், தந்தை மற்றும் மனைவிகள் அவர்களிடம் பேசி பார்த்தார்கள். கர்னல் விரேந்திர தப்பார், கார்கில் போரில் உயிரிழந்த லெப். விஜயன்ட் தப்பாரின் தந்தை "நாட்டு மக்கள் கடத்தல்காரர்களுக்கு எதிராக ஒன்றுபடவேண்டும்", என்றார். 

 

பயணிகளின் உறவினர்கள், இதெயெல்லாம் கண்டுகொள்ளவில்லை. மீடியாவும், பெருவாரியான நாட்டுமக்களும் பினையகைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள், என்றனர். காங்கிரஸ் கட்சி, நாங்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம், அதே நேரத்தில் அரசாங்கம் அதன் தவறுகளை ஒத்துக்கொள்ள வேண்டும் என்றார்கள்.

 

டிசம்பர் 28 ஆம் தேதி, இந்திய அரசாங்கம், 3 பயங்கரமான தீவிரவாதிகளை விடுவிப்பதாக ஒத்துக்கொண்டது. அவர்கள் மௌலான மசுத் அசார், அஹ்மத் சர்கர், ஓமர் ஷேக்.  

 

டிசம்பர் 31 ஆம் தேதி, கடத்தப்பட்ட பயணிகளை மீட்க இரண்டு விமானம்  கந்தஹார் கிளம்பியது. இறுதி நேரத்தில் எதுவும் சிக்கல் வந்து விட கூடாது என ஜஸ்வந்த் சிங்ம் சென்றார், அன்று மாலை பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

 

அதற்க்கு அடுத்த நாள், கடத்தல்காரர்களிடம் சரணடைந்ததாக அரசாங்கத்தை விமரிசித்தார்கள். அரசாங்கம் மிக பெரிய தவறு செய்ததாக கூறினார்கள்.

 

நம் உறவினர்கள் அந்த விமானத்தில் இருந்தால் என்ன செய்திருப்போம், நாமும் அதேதான் செய்திருப்போம். குறிப்பாக நான் அப்படிதான் செய்திருப்பேன். கோழைத்தனத்தை ஒத்துக்கொள்ள தான் வேண்டும்... 

 

அரசாங்கத்தால் மட்டும் என்ன செய்து விட முடியும், நடந்த தவறுக்கு  அரசாங்கம் மட்டுமா பொறுப்பு, நாமும் தானே........


விடுவிக்கப்பட்ட  தீவிரவாதி.........

 

மௌலான மசுத் அசார், ஒரு இயக்கத்தை ஆரம்பித்தான் ஜெயிஸ்-இ-முஹம்மது, அந்த இயக்கம் தான் நாடாளுமன்றம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் சட்டசபை தாக்குதல்களை செய்தது.

 

ஓமர் ஷேக் 9/11 தாக்குதலுக்கு பண உதவி செய்தான்,  பின்னாட்களில்  பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டான்.

 

அஹ்மத் சர்கர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிறான்..    

 

டிஸ்கி 1 : விறுவிறுப்பு ப்ரீமியம்.காமில், இதே தலைப்பில், ஒரு தொடர் வெளிவருகிறது. இதில் கூறப்பட்ட செய்திகள், அதில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல. நான் விறுவிறுப்பு ப்ரீமியம் சந்தாதாரரும் அல்ல. 
விக்கிப்பிடியவில் ஆரம்பித்து பலதரப்பட்ட வலைதளத்தில் இருந்து கிடைக்க பெற்றது.

 

 

                                                                                                    -  நன்றிகளுடன் 

                                                                                             மகேஷ் பிரபு விஜயராஜ் 


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக