திங்கள், 16 ஜூன், 2014

இது எப்புடி இருக்கு

இது எப்புடி இருக்கு, பாருங்களேன்...........

இடம் : பாரிஸ் நகரில் ஒரு பூங்கா....




மென்பொருள் நிறுவனத்தை சேர்ந்த இரண்டு இந்தியர்கள் புல்வெளியில் அமர்ந்து ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்தார்கள். 


ஒருவர் ஆஷிஷ், பீகாரை சேர்ந்தவர், இன்னொருவர் நம்ம ஊர் சிங்க குட்டி ஆனந்த்.


இருவரும் மூன்று மாத காலத்திற்கு, பாரீஸில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

இவர்களின் உரையாடல்களை ரெம்ப நேரம் கவனித்து கொண்டிருந்த ஒரு பாகிஸ்தானியர் இவர்களை அணுகினார். அறிமுக படலம் முடிந்ததும், நம்ம ஆனந்தை பார்த்து, நீ தமிழ் நாட்டை சேர்ந்தவனா என கேட்டார்....


ஆனந்துக்கு ஆச்சர்யம் தாளவில்லை, வாய்விட்டே கேட்டுவிட்டார் எப்படி கண்டுபிடித்தார் என்று.


அதற்கு அந்த பாகிஸ்தானியர், "இரண்டு இந்தியர்கள் பொதுவாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்தால், அதில் ஒருவர் கட்டாயமாக தமிழ் நாட்டை சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும், ஸ்கின் கலரை வைத்து ஆனந்த் தமிழராக இருக்கலாம் என கணித்தேன்", என்றார்.


இது எப்புடி இருக்கு........



தமிழ், தமிழ் என பேசி தேசிய நிரோட்டத்தில் கலக்காமல் விட்டு விட்டோம், கொஞ்சமாவது ஹிந்தியை கற்று இருந்திருக்கலாம். தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலைமை வந்தால் தடுமாற வேண்டிய அவசியமில்லை.

ஒரு காலத்தில் எதற்கு ஹிந்தி, ஏன் ஹிந்தி, வேனும்னா அவங்கள தமிழ் கத்துக்க சொல்லு என்று வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் வாய் சவடால் விட்டு இருக்கிறேன். 

இப்பொழுது ஆத்தா ஹய், தாத்தா ஹய் என டெல்லி வீதியில் காமெடி பண்ணிக்கிட்டு இருக்கிறேன். நான் டைலாக் விட்டவன் எல்லாம் திருப்பி என்னை கலாய்க்குறாங்க... 

சும்மாவா சொன்னங்க பட்டால் தான் நமக்கு புரியும் என்று........  

இப்போ எனக்கு புரிஞ்சிருச்சி, நீங்க இன்னா சொல்றீங்க பாஸ்...    


டிஸ்கி : என் நண்பர் ஒருவருக்கு அயல்நாட்டில் ஏற்பட்ட அனுபவத்தோடு, என் புலம்பல்களையும் மிக்ஸ் பண்ணி ஒரு பதிவு ஆக்கியாச்சு ..... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக