செவ்வாய், 3 டிசம்பர், 2013

பாட்டிய காணோம்

அம்மா, அம்மா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்............................. அழுது கொண்டே, ஓடி வந்தான் மகி,

என்னாச்சு மகி, ஏன் இப்படி ஓடி வர்ற ?..

அம்மா, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.............................

மகி என்னாச்சு, ஏன் இப்படி அழுகிற ?...

அம்மா, பாட்டி ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.............................

(அப்பன மாதிரியே வெளங்காம பேசுறானே !), புரியிறமாதிரி சொல்றா,

பாட்டிய காணோம் அம்மா, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.............................

என்னடா சொல்ற ????, 

நீதானே அம்மா சொன்னே, பாட்டி இன்னும் ஒரு மாசத்துல வருவாங்கன்னு, அவங்க வரவே இல்லை, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......................

எந்த பாட்டிடா ???

பாட்டி ஒரு மாசத்துல வந்து, வடை சுடுவாங்கன்னு சொன்னியேம்மா, நிலவில,  பாட்டி வந்து வடை சுடவே இல்லைமா,, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......................



 எங்கே? எங்கே??


                                                  வடை போச்சே !!!!!!!!!!!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக