திங்கள், 2 டிசம்பர், 2013

டெல்லியில திருவிழா


டெல்லியில டிசம்பர் 4ந் தேதி தேர்தல் நடக்க போகுது. இங்கே 15 வருசமா காங்கிரஸ் ஆட்சி பண்ணிக்கிட்டு இருக்குது. இந்த தடவை ஆட்சிய பிடிக்குமாங்கிறது சந்தேகம்தான். 

காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டெல்லாம் ப.ஜ.க., வாங்கி ஆட்சிக்கு வருமானு கேட்டா அதுவும் சந்தேகம்தான், அதுக்கு ஆம் ஆத்மி கட்சி குறுக்கே நிக்குது. கொஞ்ச கஷ்ட காலம்தான். 

இதுல நம்மாள் விஜயகாந்த் வேற 11 தொகுதில வேட்பாளர் நிறுத்தி இருக்கார். இவரோட தன்னம்பிகைய பாராட்டி அடுத்து தடவை ஐ.நா. சபை தலைவர் தேர்தலில் சீட்டு வழங்குமாறு மேதகு ஜனாதிபதியை கேட்டுக்கு கொள்கிறேன். 

தலைவர்கள் எல்லாம் அவங்க கட்சிக்கு ஓட்டு போடச்சொல்லி பிரச்சாரம் பண்ற இதே டைம்ல, யாருக்கு வேனா ஓட்டு போடுங்க, ஆனா டெல்லி மக்கள் எல்லாரும் ஓட்டு போடணும்னு சொல்லி ஒரு க்ரூப் பிரச்சாரம் பண்ணுது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் போங்க. அங்கே எடுத்த போட்டோ தான் இது....  

இந்திய கேட் பக்கத்தில வச்ச டிஜிட்டல் போர்டு 


              கிடார் வச்சிக்கிட்டு ஒரு அக்கா ? பாட்டு பாட, சுத்தி ஆடின காட்சி
                                    

                           எலக்ஷன் மாடல் பூத் (உபயம் தேர்தல் ஆணையம்) 


வேன் எல்லாம் வச்சி ஓட்டு போட சொல்றோம்ங்க, தயவு செஞ்சி ஓட்டு போடுங்க.

போஸ்டர் ஓட்ற கலாச்சாரத்தை டெல்லி கொண்டு சென்ற அண்ணன் வாழ்க.
                                                     

அந்த ப்ரோக்ராம் போன எல்லார்கிட்டையும் ஓட்டு போட சொல்லி, அவங்க பெருவிரல் ரேகையை வைக்க சொன்னாங்க, நானும் வச்சேன், ஆனா ஓட்டு போட்டா தூக்கி திகார் ஜெயில்ல போட்டுருவாங்க, எனக்கு இங்க ஓட்டே இல்லை.

இந்த ப்ரோக்ராமில் இருந்து அறியப்படும் நீதி, நம்ம ஊர்ல ஓட்டு கேட்டு கரகாட்ட கோஷ்டிய கூட்டிட்டு வர்ற மாதிரிதான், இங்கயும் நடக்குது. 
டெல்லி மக்களுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் வித்தியாசம் பெருசா இல்லை. இந்தியாவின் ஒருமைப்பாடு நல்லா தெரியுது.

பாரத் மாதாக்கி ஜெய் !!!!!!!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக