வியாழன், 24 ஏப்ரல், 2014

கள்ள ஓட்டு

தேர்தல் ஆணையம் கள்ள ஓட்டை தடுக்க எவ்வளவோ முயற்சி பண்ணுது அப்படியும் கள்ள ஓட்டு முழுசா தடுக்க முடியல. 

தீபாவளிக்கு கூட ஒழுங்கா தலைக்கு எண்ணை தேச்சி குளிக்காதவங்க, தலை புல்லா சொலு சொலுன்னு எண்ணை வச்சிட்டு ஓட்டு போட வாராங்க.

ஆள்காட்டி விரல்ல அழியாத மை வச்சாலும், தேர்தல் அதிகாரிகள் பாக்காத நேரத்தில தலைல சரக்குன்னு ஒரு தேய். மை கொஞ்ச கொஞ்சமா அழிய ஆரம்பிச்சிருது. 


                        

                            படம் : தட்ஸ்தமிழ்.காம்யிலிருந்து  (நன்றி)

 
வெளியே வந்து  நல்ல கைய கழுவிட்டு மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சிராங்க. 

இவங்களை தடுக்க நம்ம ஸ்டைல தேர்தல் ஆணையத்துக்கு ஒரு ஐடியா !!!    

இனிமே ஓட்டு போட வர்ற யாரும் தலைக்கு எண்ணை வச்சிட்டு வரக்கூடாது.  

அதையும் மீறி வந்தா பியூட்டி பார்லர்ல தலைய சாச்சி வச்சி வாஷ் பண்ணிவிடுவாங்களே, அதே மாதிரி பண்ணப்படும். 

இதற்கு ஆகும் செலவு, அந்த தொகுதியில் ஜெயிக்கும் வேட்பாளரிடம் இருந்து பின்னர் வசூலிக்கபடும் 



           

      படம் : இணையத்திலிருந்து


எப்புடி நம்ம ஐடியா !!!

நீங்க கொலைவெறில என்னை தேடுறது புரியுது. நான் எஸ்கேப் ஆகுரங்கோ....



4 கருத்துகள்: