செவ்வாய், 11 மார்ச், 2014

கோச்சடையான் Vs 'மண்ணு' மோகன் சிங்



ரஜினி இவ்வளவு பேமசா இருக்கிறத பார்த்த நம்ம 'மண்ணு' மோகன் சிங் ஓவர் பீலிங்க்ஸ் ஆகிட்டாரு. 


                                      


நம்ம 10 வருசமா பிரதமரா இருந்தும் கிடைக்காத பப்ளிசிட்டி, எப்படி ஒரு நடிகரா இருந்து இவருக்கு கிடைச்சது, நேர்ல போய் விசாரிப்போம்னு யார்கிட்டையும் சொல்லாம கிளம்பிட்டாரு. தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் பிடிச்சி சென்னைக்கு வந்துட்டார்.


                                 
                                                   

நம்ம பிரதமருக்கு பயங்கரமா பசிக்க ஆரம்பிச்சிருச்சி, பைஜாமா பாக்கெட்ல கை விட்டு பார்த்தா 10 வருசத்துக்கு முன்னாடி வச்ச ஒரு பழைய 20 ரூபாய் நோட்டு இருந்தது.


பிரதமரானதுக்கு அப்புறமாதான் இவர் கை காசு போட்டு எதுவுமே வாங்கி இருக்க மாட்டாரே, அதான் பைஜாமா பாக்கெட்ல காசு இல்லை போல.  


அம்மா உணவகத்தை போர்டு பார்த்தவுடனே, இங்கயே சாப்பிட்டுருவோம், நம்ம நிதி நிலைமைக்கு அதான் கரெக்டா வரும்னு உள்ள என்ட்ரி போட்டுட்டார். 




ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி, விலை இல்லா சட்னி-சாம்பார் (இலவசம்னு சொன்னா அம்மாக்கு பிடிக்காதில்ல),  2 ரூபாய்க்கு சப்பாத்தி, 3 ரூபாய்க்கு தயிர் சாதம், 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், 10 ரூபாய் தண்ணி பாட்டில்னு  லிஸ்ட் பார்த்து அப்படியே ஷாக் ஆகிட்டார்.




நம்ம 29 ரூபாய்க்கு மேல சம்பாதிக்கிறவங்க ஏழைங்க இல்லைன்னு முடிவு எடுத்தது சரிதான், ஒரு நாளைக்கு 20 ரூபாயே ஜாஸ்தி, டெல்லி போன உடனே அலுவாலியாகிட்ட இத பத்தி பேசணும்னு நினைச்சிட்டு, இட்லிய ஒரு பிடி பிடிச்சார்.     


                                                   


போயஸ் கார்டனுக்கு பொடி நடையா போய், அங்க கூட்டமா இருந்த அம்மா வீட்டுக்குள்ள புகுந்துட்டார்.


அங்க வாசல் இருந்த ஒரு ரத்தத்தின் ரத்தம், நம்மாள பார்த்து, வடக்குல இருந்து கட்சில சேர வந்திருக்கார் போல இருக்கு, பார்த்த நெறைய படிச்சவர் மாதிரி தெரியுது.


அம்மா இவருக்கு MP சீட் குடுத்திருமோ பயந்து, அம்மா பாக்கிறதுகுள்ள கிளப்பி விட்ரனும்னு முடிவு பண்ணி, கிட்ட போய் பேச்சு குடுத்தார்.   


இன்னாபா, இன்னா வேணும், வாட் மேட்டரு, தமிழ்ல டெல்லு,
அம்மா கைல எதுனா மனு குடுக்க வந்தியா, நம்ம கைல குடுத்துட்டு கிளம்பிகினே இரு. அம்மாவை எல்லாம் பாக்க முடியாது.


மே, ரஜினிசே தேக்லியா ஆத்தாகு,


ஏய் பெருசு, தலைவர் ஆத்தாவைய தப்ப சொல்ற............


நஹி பய்யா, மே ரஜினி தேக்கா, தேக்கா.......


தலைவர கண்டுகிட வந்தியா, இந்த ஊடு இல்லை, அந்தாண்ட போய் பாரு.


 
நம்ம சிங் தலைவர் வீட்டுக்கு உள்ள போனார், ரஜினிய பார்த்த ஆனந்ததில, அதிர்ச்சில தமிழ் பேச ஆரம்பிச்சிட்டார்..........


அவங்க 2 பேருக்குள்ள என்ன நடந்தது,  நாளைக்கு மிச்ச கூத்த பாப்போம்................................




  


     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக