பிரிட்டிஷ் அரச வம்சத்தைப் பற்றிப்
படித்தபோது கண்ணில்பட்ட சுவாரஸ்யமான விஷயம்.
1653-இல் முதலாம் சார்லஸ் அரசனின் கழுத்தை
வெட்டிக் கொலை செய்ய உத்தரவிட்டுவிட்டு, "மக்களின் பாதுகாப்பாளன்' என்ற பெயரோடு
தடபுடலாகப் பதவியேற்ற கிராம்வெல் ஐந்து வருடமே ஆண்டுவிட்டுப் பிராணனை விட்டதும் மறுபடி
முடியாட்சி.
பதவியேற்ற இரண்டாம் சார்லஸ் மன்னன் செய்த முதல் காரியம் கிராம்வெல்லின்
எலும்புகளைத் தோண்டி எடுத்து சம்பிரதாயமாக அவருக்கு மரண தண்டனை விதித்து அந்த எலும்புகளைக்
கொண்டு அதை நிறைவேற்றியது.
அதன் பின் பிராண பயம் பிரிட்டிஷ் அரசர்களையும் அரசிகளையும் தொடர்ந்து வந்திருக்கிறது. இன்னும் இங்கிலாந்து பாராளுமன்றத்தைத் தொடங்கி வைத்துப் பேருரையாற்ற ராணியம்மா அங்கே போகும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரைப் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்திருந்து, அரசியார் பத்திரமாகத் திரும்பிப் போனதும் விடுவிக்கும் பழக்கம் இருக்கிறதாம்!
உசுரோட இன்னைக்கு வீட்டுக்கு போகமுடியுமா மை லார்ட்
கிரேட் எஸ்கேப், முப்பாஸ், ஐ யாம் வெரி ஹாப்பி !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக