IC-814 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
IC-814 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 நவம்பர், 2014

தலையின் மேல் விதி - 4

முன்னாடி என்ன நடந்திருக்கும், இத அழுத்தின தெரியும்


கந்தஹார் விமான நிலையம்

 

கந்தஹார் தாலிபான்கள் இந்த விவகாரத்தை தாங்கள் கையாண்டால், உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என கருதி, IC-814 விமானத்தை சுற்றி பாதுகாவலர்களை நிறுத்தி வைத்திருந்தார்கள். நாங்கள் மத்தியஸ்தம் செய்கிறோம், கடத்தல்காரர்கள் பயணிகளை தாக்க கூடாது என்பதற்காவே  பாதுகாவலர்களை நிறுத்தி வைத்திருக்கிறோம் என்றார்கள்.


 இந்தியா அவர்களை நம்பவில்லை, இந்திய கமண்டோக்கள் விமானத்தை நெருங்க கூடாது என்பதற்காவே பாதுகாவலர்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என நினைத்தனர், அதனால் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை பேச்சுவார்த்தை நடத்துமாறு பணித்தனர். 

 

அன்று மதியம் பயணிகளின் உறவினர்கள், பிரதமர் வீட்டின் முன்பு கூடினார்கள். என்ன விலைகொடுத்தேனும் பயணிகளை மீட்க்கவேண்டும் என கோஷமிட்டார்கள். டிசம்பர் 30 வரை பிரதமர் வீட்டின் முன்பு இந்த காட்சி அரங்கேறியது.

 

கடத்தல்காரர்கள், இந்தியாவின் வெவ்வேறு சிறையில் உள்ள 36 தீவிரவாதிகளை விடுவிக்கவிடில், விமானத்தை வெடிக்க செய்து விடுவதாக மிரட்டினார்கள்.

 

வெளியுறவு துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், கடத்தப்பட்ட பயணிகளின் உறவினர்களிடம் அரசு பயணிகளை மீட்க்க எடுக்கும் முயற்சிகளை பற்றி விளக்கிக்கொண்டிருந்தார். உறவினர்கள் எதையும் கேட்கும் நிலையில் இல்லை.

 

"எங்களுக்கு எங்கள் உறவினர்கள் வேண்டும், நீங்கள் என்ன கொடுப்பீர்கள்  என்பதை பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. நீங்கள் காஷ்மீர் கொடுக்கும் நிலைக்கு வந்தால் கூட நாங்கள் கவலை பட மாட்டோம், எங்களுக்கு எங்கள் உறவினர்கள் வேண்டும்" என்றார்கள்.    

 

ஜஸ்வந்த் சிங், "நாட்டின் பாதுகாப்பையும் சிந்திக்க வேண்டும், அரசாங்கத்தால் என்ன முடியுமோ அதை கண்டிப்பாக செய்யும்" என்றார்.

 

பயணிகளின் உறவினர்கள் கோபமடைந்து கோஷமிட்டார்கள்.

 

அதன் பிறகு ஒரு நாள் மாலை, ஜஸ்வந்த் சிங் பத்திரிக்கையாளர்களுடன் சந்திப்பு நடத்தினார், அங்கும் வந்து பயணிகளின் உறவினர்கள் கூச்சலிட்டார்கள், அதில் ஒருவர், இதற்க்கு முன்பு இந்திய அரசாங்கம், உள்துறை அமைச்சர் முப்தி முஹம்மது சயீத் மகள் கடத்தப்பட்ட போது தீவிரவாதிகளை விடுவித்தது போல, இப்பொழுது விடுவியுங்கள், நீங்கள் எதை கொடுத்தாலும் கவலை  இல்லை.காஷ்மீரை கூட கொடுங்கள், எங்களுக்கு எங்கள் உறவினர்கள் வேண்டும்" என்றார்.        

 

இன்னொரு நாள் மாலை, கார்கில் போரில் இறந்த விமானி அஜய் அகுஜாவின் மனைவி, பிரதமர் அலுவலகம் வந்தார். அவர் பயணிகளின் உறவினர்களை சந்தித்தார்.

 

"கடத்தல்காரர்களின் மிரட்டலுக்கு நாம் அடிபணிய கூடாது, இது தொடர் கதையாகிவிடும். நம் நாட்டிற்க்கு அவமானம், அந்த தீவிரவாதிகள் வெளியே வந்தால் நாட்டிற்கு ஆபத்து அதிகமாகி விடும், என்னையே எடுத்துகொள்ளுங்கள், என் கணவர் நாட்டுக்கு இறந்தார், இதற்க்கு நான் பெருமைபடுகிறேன்" என்றார்.

 

இதை கேட்ட பயணிகளின் உறவினர்களில் ஒருவர், "இவள் விதவை ஆகிவிட்டாள் என்பதற்காக, அடுத்தவர்களையும் விதவை ஆகா சொல்கிறாள், எங்களிடம் வந்து பேச யாரிவள்" என்றார்.

 

இதே போல் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் தாய், தந்தை மற்றும் மனைவிகள் அவர்களிடம் பேசி பார்த்தார்கள். கர்னல் விரேந்திர தப்பார், கார்கில் போரில் உயிரிழந்த லெப். விஜயன்ட் தப்பாரின் தந்தை "நாட்டு மக்கள் கடத்தல்காரர்களுக்கு எதிராக ஒன்றுபடவேண்டும்", என்றார். 

 

பயணிகளின் உறவினர்கள், இதெயெல்லாம் கண்டுகொள்ளவில்லை. மீடியாவும், பெருவாரியான நாட்டுமக்களும் பினையகைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள், என்றனர். காங்கிரஸ் கட்சி, நாங்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம், அதே நேரத்தில் அரசாங்கம் அதன் தவறுகளை ஒத்துக்கொள்ள வேண்டும் என்றார்கள்.

 

டிசம்பர் 28 ஆம் தேதி, இந்திய அரசாங்கம், 3 பயங்கரமான தீவிரவாதிகளை விடுவிப்பதாக ஒத்துக்கொண்டது. அவர்கள் மௌலான மசுத் அசார், அஹ்மத் சர்கர், ஓமர் ஷேக்.  

 

டிசம்பர் 31 ஆம் தேதி, கடத்தப்பட்ட பயணிகளை மீட்க இரண்டு விமானம்  கந்தஹார் கிளம்பியது. இறுதி நேரத்தில் எதுவும் சிக்கல் வந்து விட கூடாது என ஜஸ்வந்த் சிங்ம் சென்றார், அன்று மாலை பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

 

அதற்க்கு அடுத்த நாள், கடத்தல்காரர்களிடம் சரணடைந்ததாக அரசாங்கத்தை விமரிசித்தார்கள். அரசாங்கம் மிக பெரிய தவறு செய்ததாக கூறினார்கள்.

 

நம் உறவினர்கள் அந்த விமானத்தில் இருந்தால் என்ன செய்திருப்போம், நாமும் அதேதான் செய்திருப்போம். குறிப்பாக நான் அப்படிதான் செய்திருப்பேன். கோழைத்தனத்தை ஒத்துக்கொள்ள தான் வேண்டும்... 

 

அரசாங்கத்தால் மட்டும் என்ன செய்து விட முடியும், நடந்த தவறுக்கு  அரசாங்கம் மட்டுமா பொறுப்பு, நாமும் தானே........


விடுவிக்கப்பட்ட  தீவிரவாதி.........

 

மௌலான மசுத் அசார், ஒரு இயக்கத்தை ஆரம்பித்தான் ஜெயிஸ்-இ-முஹம்மது, அந்த இயக்கம் தான் நாடாளுமன்றம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் சட்டசபை தாக்குதல்களை செய்தது.

 

ஓமர் ஷேக் 9/11 தாக்குதலுக்கு பண உதவி செய்தான்,  பின்னாட்களில்  பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டான்.

 

அஹ்மத் சர்கர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிறான்..    

 

டிஸ்கி 1 : விறுவிறுப்பு ப்ரீமியம்.காமில், இதே தலைப்பில், ஒரு தொடர் வெளிவருகிறது. இதில் கூறப்பட்ட செய்திகள், அதில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல. நான் விறுவிறுப்பு ப்ரீமியம் சந்தாதாரரும் அல்ல. 
விக்கிப்பிடியவில் ஆரம்பித்து பலதரப்பட்ட வலைதளத்தில் இருந்து கிடைக்க பெற்றது.

 

 

                                                                                                    -  நன்றிகளுடன் 

                                                                                             மகேஷ் பிரபு விஜயராஜ் 


    

தலையின் மேல் விதி - 3

டெல்லியில் நடந்த விமான விபத்து பற்றி தேடிய பொழுது, மேலும் சில விமான விவகாரங்கள் கண்ணில் பட்டது. உங்களுடன் பகிர ஆசைபடுகிறேன் (வேற வழி இல்லை, நீங்க படிச்சி தான் ஆகனும்,  தலைல எழுதி இருக்கிறத மாத்த முடியுமா).

 

கந்தஹார் விமான கடத்தல் பற்றி அநேகருக்கு தெரியும், அதை பற்றி ஒரு சிறு அலசல்..

  

1999 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 24 ஆம் நாள், நேரம் மாலை 04:25, நேபால் தலை நகர் காத்மாண்டு திரிபுவன் விமான நிலையத்திலிருந்து புது டெல்லி செல்லும்  ஏர்-இந்திய விமானம் IC-814, 178 பயனிகள் மற்றும் 15 விமான பணியாளர்களுடன் புறப்பட்டது.

 

ஹர்கத்-உல்-முஜாஹிதின் (பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கம்) இயக்கத்தை சேர்ந்த ஐந்து பேர் இந்திய பயனிகள் போர்வையில் விமானத்தில் ஏறினார்கள்.

 

விமானம் கிளம்பி 40 நிமிடங்கள் கழித்து, இந்திய வான்பரப்பின் மீது பறந்து கொண்டு இருந்த போது தீவிரவாதிகள் விமானத்தை கடத்தினார்கள். விமானத்தை பாகிஸ்தான் நோக்கி பறக்க சொன்னார்கள். லாகூரில் தரை இறங்கி, அங்கிருந்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தலாம் என திட்டம் தீட்டி இருந்தார்கள்.

 

துரதிருஷ்டவசமாக விமானம் தரை இறங்க லாகூர் விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்தார்கள். இந்த கட்டத்தில் விமானத்தில் குறைந்து அளவு எரிபொருள் இருந்தது. (பொதுவாக விமானத்தில் பயணிக்கும் தூரத்தை கணக்கிட்டே எரிபொருள் நிரப்பப்படும், தரைறங்கும் பொழுது அதிகமான எரிபொருள் இருந்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.)

 

விமானம் தரை இறக்கி ஆக வேண்டிய நிலைமையையில் உள்ளதால், அமிர்தசரஸில் விமானத்தை இறக்கலாம் என விமானி கூறினார்.

 

இந்திய மண்ணில் கடத்திய விமானத்தை தரை இறக்குவது, சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது மாதிரி தான், ஆனால் தீவிரவாதிகளுக்கு வேறுவழி இல்லை.

 

எரிபொருள் நிரப்பிய பிறகு உடனே அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்ற நிபந்தனையோடு ஒத்துக்கொண்டார்கள்.

 

மாலை 07:00 மணியளவில் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது.

 

NSG கமாண்டோக்கள் டெல்லியிலிருந்து வரும் வரை எரிபொருள் நிரப்புவதை தாமதபடுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. இப்படியாக முக்கால் மணி நேரம் ஓடிவிட்டது.

 

தாமதமாவதை உணர்ந்த தீவிரவாதிகள் விமானத்தை லாகூரூக்கு செலுத்துமாறு உத்தரவிட்டார்கள். விமானி, விமானத்தை கிளப்பாமல் எரிபொருள் நிலைமையை விளக்கிக்கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் பயணிகளை தாக்க தொடங்கினர்.

 

இந்த தாக்குதலில் ரூபின் கட்யல் (28) என்ற வாலிபர் உயிரிழந்தார் . இவர் தனது புது மனைவியுடன் நேபாளத்தில் தேனிலவிற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார் என்பதுதான் பரிதாபம். மேலும் 17 பயணிகள் காயமடைந்தனர்.

 

விமானி, வேறு வழியில்லாமல் மிக குறைந்த எரிபொருளுடன் விமானத்தை  மறுபடியும் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் கொண்டு சென்றார். இந்நிலையில் ஏதாவது பெரிய வாகனத்தை ரன்வேயின் குறுக்கே நிறுத்தி வைத்தோ அல்லது விமானத்தின் டயரை சுட்டோ, விமானத்தை தடுக்கலாம் என நினைத்தது நிறைவேறாமல் போய்விட்டது.

 

 அமிர்தசரஸிலிருந்து லாகூர் வெறும் 55 கி. மீ. தூரம் மட்டுமே....

 

மறுபடியும்  லாகூர் விமான நிலைய அதிகாரிகள், விமானத்தை தரை இறங்க அனுமதிக்க வில்லை. இதற்க்கு முத்தாய்ப்பாக தங்களது வான்பாதையையும் மூடி வைத்தார்கள்.

 

(இது தான் பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டில ஆற்றதோ)

 

வான்பாதையை மூடுவது என்பது, விமான நிலையத்தில் அனைத்து தொலை தொடர்பு சாதனங்கள், விளக்குகள் மற்றும் ஓடு பாதையில் உள்ள விளக்குகள் ஆகியவற்றை அனைத்து வைப்பதாகும்.

 

எரிபொருள் தீரும் நிலையில், விமானிக்கு வேறு வழி இல்லாததால் லாகூர் விமான நிலைய அதிகாரிகள் மறுப்பையும் மீறி தரை இறங்க முடிவு செய்தார்.

 

நன்கு வெளிச்சமாக இருந்த சாலையை ஓடுபாதை என தவறாக நினைத்து விமானத்தை கிழே இறக்கினார் . அவருக்கு ஓடு பாதையில் உள்ள விளக்குகள் அனைத்து வைத்த விபரம் தெரியாது. சாலையை நெருங்கும் சமயம், தன் தவறை உணர்ந்து, விமானத்தை மேல் எழுப்பினார்.

 

இப்பொழுது விமானம் தரை இறக்கி ஆகா வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, இல்லை என்றால் எரிபொருள் இல்லாமல் கிழே விழுந்து வெடித்து விடும். வேறு வழி இல்லாததால் லாகூர் விமான நிலைய அதிகாரிகள், இரண்டு நிபந்தனைகளோடு விமானத்தை தரை இறங்க அனுமதித்தனர், அவை,,,

 

விமானம் எரிபொருள் நிரப்பியதும், லாகூரில் இருந்து கிளம்பி விட வேண்டும்,

 

விமானத்தை விட்டு கிழே யாரும் இறங்ககூடாது.

 

எரிபொருள் நிரப்பியதும் விமானம் லாகூரில் இருந்து கிளம்பி முதலில்   காபுல் (ஆப்கானிஸ்தான்) சென்றது, அங்கே தரை இறங்க மறுக்கப்பட்டது, பின்பு மஸ்கட் (ஓமான்), அங்கேயும் மறுக்கப்பட்டது. பின்பு துபாய் சென்றது.

துபாயும் கடத்தல் விமானம் தரை இறங்க அனுமதிக்க விரும்பவில்லை. தங்களது ஓடு பாதையில் பேருந்துகளை நிறுத்தி வைத்திருந்தார்கள். அப்போதைய இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் வேண்டுகோளின்படி "Al Minhad" விமான தளத்தில் தரை இறங்க அனுமதித்தனர் (இது துபாயில் இருந்து 40 மையில் தொலைவில் உள்ளது).

 

மனிதாபிமான அடிப்படையில் விமானத்தை தரை இறங்க அனுமதித்யுள்ளோம், அவர்கள் இங்கே அதிக நேரம் தங்குவதை நாங்கள் விரும்பவில்லை என்றார்கள்.


 
 

 


கடத்தல்காரர்கள் விமான தள அதிகாரிகளிடம் உணவு மற்றும் எரிபொருள் நிரப்புமாறு கேட்டார்கள். காயம் பட்டவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவித்தால் ஏற்பாடு செய்வதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினார்கள்.

இதற்க்கு கடத்தல்காரர்கள் ஒத்துக்கொண்டார்கள்.

                        

ரூபின் கட்யல் இறந்த உடல் மற்றும் 27 பயணிகளை விடுவித்தனர்.

 

இதே சமயத்தில் அமிர்தசரஸ் விமான நிலையத்திலிருந்து IL-76 எனும் விமானத்தில் NSG கமாண்டோக்கள், பயணிகளை மீட்க்க துபாய் நோக்கி சென்றனர். துபாய் விமான நிலையத்தில் ரன்வே அடைத்து வைக்கப்பட்டதால் திரும்பி வந்துவிட்டனர். (அந்த ரன்வே மட்டும் அப்பொழுது திறந்திருந்தால் விதி மாறி இருக்கும், இந்தியாவும் தலைகுனிவை சந்தித்திருக்க வேண்டாம்)..

 

அடுத்த நாள் காலை, டிசம்பர் 25 விமானம் கந்தஹார் சென்றது....................

         

பதிவின் நீளம் அதிகமாகிவிட்டதால், இதன் முடிவு அடுத்த பதிவில் வரும்.............

டிஸ்கி 1 : விறுவிறுப்பு ப்ரீமியம்.காமில், இதே தலைப்பில், ஒரு தொடர் வெளிவருகிறது. இதில் கூறப்பட்ட செய்திகள், அதில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல. நான் விறுவிறுப்பு ப்ரீமியம் சந்தாதாரரும் அல்ல. 

விக்கிப்பிடியவில் ஆரம்பித்து பலதரப்பட்ட வலைதளத்தில் இருந்து கிடைக்க பெற்றது.



 
                                                                                                    -  நன்றிகளுடன் 
                                                                                      மகேஷ் பிரபு விஜயராஜ்